5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Train: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ!

சென்னையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி - சென்னை சென்டிரல், சென்டிரல் - திருவள்ளூர், திருவள்ளூர் - சென்டிரல் இடையே ரயில்கள் இயக்கப்படுகிறது.

Chennai Train: சென்னையில் 3 புதிய மின்சார ரயில்கள்.. எந்தெந்த ரூட் தெரியுமா? டைமிங் இதோ!
சென்னை மின்சார ரயில்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Sep 2024 15:58 PM

சென்னை மின்சார ரயில்கள்: சென்னையில் ரயில் போக்குவரத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். மின்சார ரயில் சேவை ஒருநாள் இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், மின்சார ரயில் சேவையை தொடர்ந்து இயக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 3 வழித்தடங்களில் இன்று முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 2 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “டிவி சத்தம் ஏன் அதிகமா இருக்கு?” இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. கோவையில் ஷாக்!

3 புதிய மின்சார ரயில்கள்:


இன்று முதல் 3 வழித்தடங்களி மூன்று புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, ஆவடி – சென்னை சென்டிரல் இடையே காலை 9.50 மணிக்கும், சென்டிரல் – திருவள்ளூர் இடையே காலை 10.40 மணிக்கும், திருவள்ளூர் – சென்டிரல் இடையே மாலை 3.50 மணிக்கும் மூன்று புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.  இதேபோன்று சில மின்சார ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Also Read: கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் கொட்டப்போகும் மழை… எங்கெங்கு?

கூடுவாஞ்சேரி – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சென்னை கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரவு 8.55, 10.10, 10.25, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து, மதியம் 12.10 மணிக்கு மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Latest News