5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Infant Murder | பெண் குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி வாக்குமூலம்!

Father Killed Child | போலீசாரின் தீவிர விசாரணையில் 9 நாட்களே ஆன குழந்தையை குத்தி கொலை செய்தது, குழந்தையின் தந்தை என்னும் திடுக்கிடும் உண்மையை கண்டுபிடித்துள்ளனர். குழந்தையின் தந்தை குழந்தையின் வயிற்றில் மூன்று முறை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. 

Infant Murder | பெண் குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி வாக்குமூலம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 18 Jul 2024 19:49 PM

பெண் குழந்தை குத்தி கொலை : சென்னை வியாசார்பாடி, சுந்தரம் தெருவை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 9 நாட்கள் வரை நலமுடன் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி காலை வீட்டில் குளித்துக்கொண்டிருந்த குழந்தையின் தாய் விஜயலட்சுமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் பிறந்து 9 நாட்களே ஆன அவரது பெண் குழந்தையின் வயிற்றில் கத்தி குத்து காயங்கள் இருந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த குழந்தையை கண்டு செய்வது அறியாது தடுமாறிய விஜயலட்சுமி, உடனடியாக குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

பெற்ற குழந்தையை கொலை செய்த தந்தை – போலீசாரின் விசாரணையில் வெளியான உண்மை

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை கடந்த 9 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடந்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் 9 நாட்களே ஆன குழந்தையை குத்தி கொலை செய்தது, குழந்தையின் தந்தை என்னும் திடுக்கிடும் உண்மையை கண்டுபிடித்துள்ளனர். குழந்தையின் தந்தை, குழந்தையின் வயிற்றில் மூன்று முறை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : Nilgiris Rain : 40செமீ வரை கனமழை.. வெள்ளக்காடான நீலகிரி.. வீடுகளில் புகுந்த மழை நீர்!

3வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் தந்தை வெறிச்செயல்

இது குறித்து குழந்தையின் தந்தையிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Amstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகள் தொடர்பு.. மேலும் 3 பேர் கைது..

சென்னை வியாசார்பாடியில் பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தந்தையே கத்தரிக்கோலால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News