5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: மனைவி, 5 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… கணவன் விபரீத முடிவு.. பகீர் காரணம்!

தேனியில் மனைவி, குழந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் வீட்டில் கணவன், தனது மனைவி, குழந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Crime: மனைவி, 5 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… கணவன் விபரீத முடிவு.. பகீர் காரணம்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 24 Aug 2024 11:05 AM

மனைவி, 5 வயது குழந்தை கொலை: தேனியில் மனைவி, குழந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (35). இவர் அதே பகுதியை சேர்ந்த அஜித்தா (33) என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். சதீஷ்குமார் தேனியில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், பைனான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் 4 மாதங்களாக சதீஸ்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் வீட்டில் இருந்துள்ளார். வேலைக்கு போகாததால் வீட்டிலும் நிதி பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Also Read: அடுத்தடுத்த உயிரிழப்பு.. சிவராமனின் தந்தை இறப்பு.. கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பகீர்!

இது சதீஷ்குமார் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது மனைவியையும், 5 வயது குழந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பிறகு சதீஷ் குமார் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து உறவனிர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

கணவன் விபரீத முடிவு:

3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், சம்பவ நடந்த வீட்டில் ஒரு டைரியையும் போலீசாரும் கைப்பற்றியுள்ளனர். அதில், ”எனக்கு வாழப்பிடிக்கவில்லை என்றும் நான் இறந்துவிட்டால் எனது மனைவி, குழந்தை கஷ்டப்படுவார்கள். எனவே நான் அவர்களையும் என்னுடன் அழைத்து செல்வதாக” அவர் குறிப்பிட்டிருந்ததார் சொல்லப்படுகிறது.

Also Read: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்!

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சதீஷ்குமார் தனது மனைவி, மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாகாது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதனை மனம் விட்டு பேசி சரிசெய்ய முடியும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

 

Latest News