5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: முகம் சிதைந்த கொடூரம்.. வங்கி பெண் அதிகாரியை கொன்ற கணவன்.. திடுக் வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை கொலை செய்துவிட்டு வீட்டிற்குள் பூட்டி வைத்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, முகம், தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் அந்த பெண் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Crime: முகம் சிதைந்த கொடூரம்.. வங்கி பெண் அதிகாரியை கொன்ற கணவன்.. திடுக் வாக்குமூலம்!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Aug 2024 08:56 AM

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: கள்ளக்குறிச்சியில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (32). இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அசோக் குமாரை 2019ல் திருமணம் செய்துக் கொண்டார். ரமணி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, ரமணிக்கு அவரது அம்மா லட்சுமி போன் செய்துள்ளார். ஆனால், ரமணி போன் எடுக்கவில்லை. சில மணி நேரத்தில் காத்திருந்த அவர், நேரடியாக ரமணி வீட்டிற்கே வந்து பார்த்தார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ரமணி சடலமாக தனி அறையில் இருந்துள்ளார்.

மேலும், அவரது முகம், தலை ஆகிய இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமணியின் கணவர் அசோக் குமார் காணாமல் போனது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை தீவிரமாக தேடிய போலீசார், வேப்பூரில் அவரை பிடித்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில் திடுக் தகவல்கள்:

அசோக் குமார் அளித்த வாக்குமூலத்தின்படி, “ரமணிக்கு பல ஆண்களுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி வீட்டிற்கு நான் செல்லும்போது யாரோ ஒருவரிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார். அதை பற்றி நான் ரமணியிடம் கேட்க, எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் ரமணியை அடித்துவிட்டு வெளியே சென்றுவிட்டேன்.

இரவில் வீட்டிற்கு வந்த நான், குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து ரமணிக்கு கொடுத்துவிட்டு, அவர் மயக்க நிலைக்கு சென்றவுடன் தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு குழந்தைகள் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். மேலும், ரமணி கொன்றுவிடுவார் என்று பயந்து, அவருக்கு முன்பு நான் அவரை கொலை செய்துவிட்டேன் என்று அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News