காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்..விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி.. சோக சம்பவம்! - Tamil News | lovers took tragic decision because of parents oppose their love in Krishnagiri | TV9 Tamil

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்..விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி.. சோக சம்பவம்!

Published: 

25 Aug 2024 16:28 PM

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்..விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி.. சோக சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

காதல் விவகாரத்தில் விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள கெளதாளம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி. இவருக்கு வயது 21. இவரும் தனது ஊருக்கு அருகில் இருக்கும் வேறொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் கதை வீட்டிற்கு தெரியவந்த நிலையில், இருவரது வீட்டிலும் காதலுக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த நரசிம்ம மூர்த்தி மற்றும் அவரது காதலியான 17 வயது சிறுமி ஆகியோர் விபரீத முடிவு எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : பிறந்தநாள் கொண்டாட்டம்.. திடீரென மயங்கி விழுந்த விஜயகாந்த் மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விபரீத முடிவு

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கெலமங்கலம் காவல் நிலைய போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழங்க்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மோடியை புகழ்ந்த மனைவி.. கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவன்.. விவாகரத்து செய்து அதிர்ச்சி!

காரணத்தை வீடியோ பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பிய காதல் ஜோடி

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவை சேர்ந்த கொல்லப்பா, சசிகலா ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவு முறையில் அண்ணன், தங்கை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி சசிகலாவுக்கு திருமணத்திற்காக மாப்பிள்ளையும் தேடியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஊர் எல்லையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அப்போது உறவினர்கள் அவர்களை தேட ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமன்றி இருவரையும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த காதலர்கள் இருவரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : Crime: ”இந்த சாப்பாடு நான் கேட்கல” பிடித்த உணவை சமைக்காததால் ஆத்திரம்.. லின் இன் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்!

தற்கொலைக்கு முன்னதாக தாங்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என தங்களது நண்பர்களுக்கு வீடியோ பதிவு செய்து அனுப்பி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தககது.

Related Stories
Chennai Crime News: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. சூட்கேஸில் இருந்த உறுப்புகள்.. அதிர்ந்த சென்னை!
இனி இரவு நேரத்தில் ஆன்லைன் கேம் விளையாட முடியாது.. அமலாகும் புதிய விதிமுறைகள் என்ன?
Tamilnadu Weather Alert: வாட்டி வதைக்கும் வெயில்.. இன்னும் 4 நாட்களுக்கு மோசமாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்!
ஸ்விக்கியில் பணியாற்றி வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. வாடிக்கையாளர் கொடுத்த புகாரால் நேர்ந்த சோகம்..
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version