5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Cabinet Reshuffle: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?

தமிழக அமைச்சரவை மாற்றம்: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அவரது அமைச்சர் பதவி கை நழுவியது. அதேபோல, நாசர் குறித்து பல சர்ச்சைகள் வெளியானதால் அவர் அமைச்சரவையில் நீக்கப்பட்டார். இந்தநிலையில், இவர்கள் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

TN Cabinet Reshuffle: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?
செந்தில் பாலாஜி – பொன்முடி – நாசர்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Sep 2024 22:53 PM

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. செந்தில் பாலாஜி கைது, டிஜிபி, தலைமைச் செயலாளர் மாற்றம் போன்றவை நிகழ்ந்துள்ளன. மேலும், கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம்:

ஆனால் தேர்தல் பணி காரணமாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் அப்போது மாற்றப்படவில்லை.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வெளியே வந்தவுடன் அமைச்சரவையில் மாற்ற செய்யலாம் என ஸ்டாலின் கூறியதாக சொல்லப்பட்டது. அதேபோல, நேற்று  முன்தினம் செந்தில் பாலாஜி சிறையில் வெளியே வந்திருக்கிறார்.  இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது.  இதில் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Also Read: துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் பதவியேற்பு!

யார் யாருக்கு எந்த பதவி?

அதேபோல, கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.  அதோடுவிளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதிக்கு துணை முதலமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு மேலும் திட்டம், வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவையில் இருந்து மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பதில் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அதன்படி, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. மேலும், செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அவரது அமைச்சர் பதவி கை நழுவியது. அதேபோல, நாசர் குறித்து பல சர்ச்சைகள் வெளியானதால் அவர் அமைச்சரவையில் நீக்கப்பட்டார். இந்தநிலையில், இவர்கள் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொன்முடி டூ ராஜகண்ணப்பன்:

உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

Also Read: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest News