Chennai Crime News: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. சூட்கேஸில் இருந்த உறுப்புகள்.. அதிர்ந்த சென்னை! - Tamil News | man arrested after police find women chopped body in suitcase in thoraipakkam chennai | TV9 Tamil

Chennai Crime News: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. சூட்கேஸில் இருந்த உறுப்புகள்.. அதிர்ந்த சென்னை!

Updated On: 

19 Sep 2024 14:23 PM

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் போட்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மணி என்பவரை கைது செய்தனர். தீபாவுக்கும் கைதான மணிக்கும் என்ன தொடர்பு? கொலைக்கான காரணம்? என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Crime News: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. சூட்கேஸில் இருந்த உறுப்புகள்.. அதிர்ந்த சென்னை!

மாதிரிப்படம்

Follow Us On

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் போட்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் ரத்தம் வடிந்தப்படி சூட்கேஸ் ஒன்று கிடப்பதாகவும், அதில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் மக்கள் காலையிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மமான சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் உடல் பாகங்களை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால், தெண் மண்ட இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன்கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்:

பின்னர், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொலை செய்யப்பட்டது பெண் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் கொலை செய்யப்பட்ட பெண் 32 வயதான தீபா என்பது தெரியவந்துள்ளது.

Also Read: வாட்டி வதைக்கும் வெயில்.. இன்னும் 4 நாட்களுக்கு மோசமாக இருக்கும்.. வானிலை மையம் தகவல்!

இவர் சென்னை மாதவரத்தை சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக போலீசார் தெரிவித்தனர்.   மேலும், கொலை செய்யப்பட்ட உடல் தீபா என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தீபா துரைப்பாக்கத்தில் அவரது அண்ணன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அண்ணன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவர் காணாமல் போனதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து தீபாவை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் சூட்கேஸை வீசி சென்றது போன்று பதிவாகி இருந்தது. உடனே சிசிடிவியில் இருக்கும் நபர் பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியைச் சேர்ந்த மணி என்பது தெரியவந்துள்ளது. இவர் தீபாவை சுத்தியால் அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்

இதனால் போலீசார் அவர் மீது  துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தீபாவுக்கும் கைதான மணிக்கும் என்ன தொடர்பு? கொலைக்கான காரணம்? என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துண்டு துண்டாக வெட்டப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதுபோன்று சம்பவம் நடத்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியாக இருப்பது துரைப்பபாக்கம். ஒ.எம்.ஆர் சாலை எப்போது பரபரப்பாக இருக்கும். இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் ஐடி காரிடர் என்று கூறப்படும் அளவுக்கு இங்கு அதிகமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

Also Read: சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..

இந்த ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் காலை, இரவு என அனைத்து நேரங்களில் எப்போது பரபரப்பாகவே இருக்கும். ஓம்.எம்.ஆர் சாலையில் டிராபிக்கும் அதிகமாகவே இருக்கும். இப்படி எப்போதும் பிஸியாகவே இருக்கும் ஓம்.ஆர்.சாலையில் உள்ள துரைப்பாக்கத்தில் தான் இன்று காலையிலேயே தான் இளம்பெண் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் உடலை கைப்பற்றிய 5 மணி நேரத்திற்குள் போலீசார் கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version