5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!

Revenge Murder | திருப்பத்தூரின் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ், இவருக்கு தர்ஷன் என்ற 4 வயது மகனும், யோகித் என்ற 6 வயது மகனும் இருந்துள்ளனர். யோகராஜுக்கு வசந்தகுமார் என்ற நண்பர் இருக்கிறார். வசந்தகுமார் அடிக்கடி யோகராஜின் குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி தருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Sep 2024 11:39 AM

திருப்பத்தூரில் ரூ.14,000 கடனை திருப்பி தராததால் நண்பனின் குழந்தைகளை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி குழந்தைகளை அழைத்துச் சென்ற அந்த நபர், இறக்கமின்றி குழந்தைகளை கொலை செய்துள்ளார். அந்த நபர் குழந்தைகளை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : TVK Conference : அக்டோபர் 27-ல் தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. அறிக்கையில் கூறியிருப்பது என்ன?

தின்பண்டம் வாங்கி தருவதாக குழந்தைகளை அழைத்துச் சென்ற வசந்தகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வெறும் ரூ.14,000-க்காக 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூரின் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ், இவருக்கு தர்ஷன் என்ற 4 வயது மகனும், யோகித் என்ற 6 வயது மகனும் இருந்துள்ளனர். யோகராஜுக்கு வசந்தகுமார் என்ற நண்பர் இருக்கிறார். வசந்தகுமார் அடிக்கடி யோகராஜின் குழந்தைகளை கடைக்கு அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கி தருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நண்பன் என்பதால் யோகராஜும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : Gold Price September 20 2024 : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத குழந்தைகள்

இதேபோல நேற்று மாலை யோகராஜின் குடியிருப்பு பகுதிக்கு சென்ற வசந்தகுமார், யோகராஜின் குழந்தைகளை தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வழக்கம் போல தான் கடைக்கு அழைத்துச் சென்றிருப்பார் என யோகராஜ் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் குழந்தைகளும், வசந்தகுமாரும் வீட்டிற்கு திரும்பி வராத நிலையில், பதறிப்போன யோகராஜ் நண்பனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் வசந்தகுமாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. இதனால் பதறிப்போன யோகராஜ், உடனடியாக அருகில் உள்ள ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் குழந்தைகளையும், நண்பனையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார். அவரின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்.. இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடக்கம்!

சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்

போலீசாரின் விசாரணையின் போது, காணாமல் போன யோகராஜின் 2 குழந்தைகளும் வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று, சிறுவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். பிறகு உடனடியாக சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

ரூ.14,000 கடனுக்காக அரங்கேறிய கொலை

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், யோகராஜின் நண்பர் வசந்தகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், யோகராஜுக்கு வசந்தகுமார் ரூ.14,000 கடனாக கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது, யோகராஜ் தர மறுத்துள்ளார். இந்த பிரச்னை காரணமாக வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும்  இடையே மோதல் ஏற்பட இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமார், யோகராஜை பழிவாங்கும் நோக்கில் அவரது குழந்தைகளை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க : Armstrong Murder Case : ”ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு”.. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் பரபரப்பு கடிதம்!

வெறும் ரூ.14,000 பணத்திற்காக நண்பனின் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News