5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coimbatore Crime News: “டிவி சத்தம் ஏன் அதிகமா இருக்கு?” இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. கோவையில் ஷாக்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, இளைஞரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பிரவீன் (35), நாகராஜன், சந்துரு, சூர்யா மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது.

Coimbatore Crime News: “டிவி சத்தம் ஏன் அதிகமா இருக்கு?” இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.. கோவையில் ஷாக்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 09 Sep 2024 15:03 PM

இளைஞர் வெட்டிக் கொலை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை அடுத்து, இளைஞரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவருக்கு வயது 24. இவரது வீட்டிற்கு எதிரே பிரவீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வீட்டில் அதிக சத்தத்துடன் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால், அவரது வீட்டிற்கு சென்ற கோகுல கிருஷ்ணன் டிவி சத்தத்தை குறைக்கும்படி கூறியிருக்கிறார். இதற்கு பிரவீன் மறுத்ததாகவும், இதனால் இவர்களுக்கு இருவருக்கு இடையே அப்போது வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.

இந்த பிரச்னை முதலே இவர்களுக்கு இருவருக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் இரண்டு பேருக்கு மட்டுமின்றி, இவர்களது இரண்டு குழுவுக்கு அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இதனால், இரண்டு தரப்பினருமே பிரச்னையை தீர்க்க முடிவு செய்தனர். இரண்டு தரப்பினரும் கடந்த சனிக்கிழமை கெம்பட்டி காலனியில் கூடினர். அப்போது இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்னை குறித்து விவாதித்தனர்.

Also Read: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. தேனியில் நடந்த சோகம்..

5 பேர் கொண்ட கும்பல் வெறிச் செயல்:

அப்போது இரண்டு கும்பலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், இறுதியில் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இரண்டு கும்பலும் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டனர். குறிப்பாக, பிரவீன் மற்றும் அவரது நண்பர்கள் கோகுல கிருஷ்ணனை கட்டை மற்றும் கத்தியால் தாக்கினர். அந்த இடத்தில் தப்பித்து ஓட முயன்றபோது அவரை பின்னால் துரத்தி சென்று 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்த அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் கோகுல கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செல்வபுரம் போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுல கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: சென்னையில் ஷாக்.. 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி..

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பிரவீன் (35), நாகராஜன், சந்துரு, சூர்யா மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்துள்ளது.  இளைஞரை ஓட ஓட ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News