5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வைகோவிற்கு சென்னையில் சிகிச்சை… என்னாச்சு? துரை வைகோ பகிர்ந்த தகவல்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நேற்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

வைகோவிற்கு சென்னையில் சிகிச்சை… என்னாச்சு? துரை வைகோ பகிர்ந்த தகவல்!
வைகோ
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2024 07:21 AM

வைகோவிற்கு சென்னையில் சிகிச்சை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் மிக மூத்த தலைவர் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ (80). மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் வைகோ மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதாவது, திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிட்டார். இப்படியான சூழலில் தான், வைகோ வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Also Read: தேதி குறித்த விஜய்.. த.வெ.க நிர்வாகிகளுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தோள்படையில் எலும்பு முறிவு:

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, திருமண விழாவில் பேசிய துரை வைகோ, “திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வைகோ புறப்பட்டு கொண்டு இருந்தபோது திடீரென கீழே தவறி விழுந்துள்ளார். இதனால், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்காக அவசரமாக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டதாக” தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காயமடைந்ததாக வெளியான தகவல் மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Also Read: “வன்மத்தைக் கக்குறாங்க.. வதந்திகளைப் பரப்புகின்றனர்” முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Latest News