“Wait and See” சட்டமன்ற தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்! - Tamil News | | TV9 Tamil

“Wait and See” சட்டமன்ற தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Published: 

15 Jun 2024 21:49 PM

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியின் 40 எம்.பிக்களும் கலந்து கொண்டனர். இதன்பின், விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார். சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது" என்றார்.

Wait and See சட்டமன்ற தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

Follow Us On

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியின் 40 எம்.பிக்களும் கலந்து கொண்டனர். இதன்பின், விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”கடந்த முறை இங்கே நான் கலந்துகொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் ‘டிரெண்ட்’ ஆனது. அதற்குக் காரணம், எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து ‘Close’ செய்துவிட்டார். சகோதரர் ராகுலின் அந்த அன்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நாற்பதும் நமதே என்று முழங்கினேன்! நடக்குமா? நடக்க விடுவார்களா? என்று பலரும் யோசித்தார்கள்.

ஆனால், நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் நம்பிக்கைக்கு அடித்தளம் யார்? கொள்கைக்காக இங்கே கூடியிருக்கும் நீங்கள்தான் என்னுடைய நம்பிக்கைக்கு அடித்தளம்! இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்கள்தான் அந்த நம்பிக்கைக்கு ஆதாரம்! எப்படிப்பட்ட தொண்டர்கள் இந்த இயக்கத்திற்குக் கிடைத்திருக்கிறார்கள். “வெட்டி வா” என்று சொன்னால் “கட்டி வருகிறவர்கள் மட்டுமல்ல”, அதை வைத்துக் கோபுரம் எழுப்பக் கூடியவர்கள் என்று மீண்டும் நிரூபித்துவிட்டார்கள்! இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, காலத்தை உங்களுடைய கடமைக்காக மட்டுமே ஒப்படைத்து, நாற்பதுக்கு நாற்பது மட்டும்தான் நம்முடைய இலக்கு என்று நாளும் உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் – இந்தியா கூட்டணிக் கட்சித் தோழர்கள் அத்தனை பேரும் இருக்கின்ற திசையை நோக்கி நான் வணங்குகிறேன்.

இந்த வெற்றிவிழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல; இந்த மேடையில் இருக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது. இது சாதாரண வெற்றி இல்லை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! இந்தக் கூட்டத்தை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் தொண்டர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

எல்லாவற்றுக்கும் மேல், நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களே தமிழ்நாட்டு மக்கள், அவர்களுக்கான வெற்றி! புதிய வரலாற்றைப் படைப்பதற்கான வெற்றி! 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றியைத் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குப் பெற்றுத் தந்தார். அன்றைக்கு இருந்த நிலைமை என்ன? அப்போது ஆளுங்கட்சி அ.தி.மு.க! அந்தத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை உணர்ந்து, அம்மையார் ஜெயலலிதா மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினார்கள். உடனே செய்தியாளர்கள் தலைவர் கலைஞரிடம் அதைபற்றி கேட்டார்கள்… அவர் சிரித்துக்கொண்டே “இது எங்களுடைய 41-ஆவது வெற்றி” என்று சொன்னார்.

2004-இல் நாம் 40-க்கு 40 வெற்றி பெற்றபோது ஆளும் அ.தி.மு.க. மீதான அதிருப்தியில் பெற்ற வெற்றி என்று சிலர் சொன்னார்கள்… அது அதிருப்தி என்றால், 2024-இல் பெற்றிருக்கின்ற 40-க்கு 40 வெற்றி, நம்முடைய திராவிட மாடல் அரசு மேல், மக்களுக்கு இருக்கிற திருப்தியில் கிடைத்திருக்கின்ற வெற்றி. ஆனால், அதைப் பற்றி யாரும் சொல்லமாட்டார்கள்.நம்முடைய தொடர் வெற்றிக்குக் காரணம் என்ன, கொள்கை உறவோடு கடந்த ஐந்து தேர்தல்களாகத் தமிழ்நாட்டில் தொடருகின்ற நம்முடைய கூட்டணி ஒற்றுமைதான் நம்முடைய வெற்றிக்கு அச்சாணி. அதனால்தான் நான் இப்போதும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன், இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்களுக்கிடையில் இருப்பது வெறும் தேர்தல் உறவு கிடையாது; கொள்கை உறவு.

தேர்தல் அறிவித்த பிறகு பா.ஜ.க. என்னவெல்லாம் செய்தார்கள்? விதிகளை மீறி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதுபோன்று தேர்தல் பிரசாரம் செய்தார்கள். சிறுபான்மைச் சமூகத்தினரைத் தரக்குறைவாகப் பேசினார்கள். உத்திரபிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தினார்கள். ஏராளமான போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் பல கோடி ரூபாய் செலவில் வாட்ஸ்ஆப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும், பா.ஜ.க. வாங்கியது எவ்வளவு? 240 தான்! இந்த 240 என்பது, மோடியின் வெற்றி இல்லை; மோடியின் தோல்வி. அருமை நண்பர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களும் – மரியாதைக்குரிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களும் ஆதரவு தந்திருக்காவிட்டால் மெஜாரிட்டி ஏது! அவர்களால்தான் மோடி இப்போது பிரதமராக உட்கார்ந்திருக்கிறார்.

நாம் நம்பிய அரசியல் சட்டமும், ஜனநாயகமும்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 237 உறுப்பினர்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறோம். பா.ஜ.க. நினைத்தையெல்லாம் செய்ய முடியாது. இப்போதுகூட, தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்று என்ன செய்யப் போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் யாரென்றால்… தங்களை தாங்களே அறிவாளியாக நினைத்துக் கொள்பவர்கள்! ஜனநாயகத்தின் அடிப்படை தெரியுமா அவர்களுக்கு? இப்படி கேள்வி கேட்டு அவர்கள் நம்மை இழிவுபடுத்தவில்லை… நாட்டு மக்களைத்தான் இழிவுபடுத்துகிறார்கள்! “40 பேர் கேண்டீனில் வடை சாப்பிடச் செல்கிறீர்களா?” என்று சிலர் கேட்கிறார்கள்… வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை! எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தைச் சுடுவார்கள்! Wait and seee!

பழனிசாமி அவர்களே… இப்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகத்தான் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன்படி பார்த்தால், தி.மு.க. கூட்டணி 221 இடங்களில் முன்னிலை வகித்திருக்கிறது. அடுத்து, இன்னும் சிறிது நாட்களில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்தத் தேர்தலிலும், நம்முடைய கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாதான் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். தொடர் வெற்றியால் எனக்கு மமதை வந்துவிடவில்லை; ஆணவம் ஏற்படவில்லை; மாறாக எனக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது; தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்த மேடையில் நின்று, வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், “எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது! உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை.

இனி தமிழ்நாட்டில் எப்போதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது” என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்த வெற்றிவிழா கட்டியம் கூறட்டும்” என்றார்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version