5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர இருந்தார். ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு மோடி வரவிருந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை சந்தித்தன. தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எட்டு முறை வருகை தந்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர்.

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.. காரணம் என்ன?
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 Jun 2024 20:13 PM

மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு: வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர இருந்தார். ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகைக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் கரு.நாகராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு  செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும்,  சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை டெல்லிக்கும் மோடி தொகுதியான வாரணாசிக்கும் இடையே 2019ல் தொடங்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read: மீண்டும் அதிகரிக்கப்போகும் வெப்பம்.. தமிழ்நாட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!

இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக மோடியின் தமிழ்நாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு மோடி வரவிருந்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை சந்தித்தன. தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எட்டு முறை வருகை தந்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றே திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மோடியின் தமிழகம் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா!

Latest News