5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வைரலான 2023 வீடியோ.. சிறப்பு காவல் துணை ஆய்வாளர் மீது பாய்ந்த நடவடிக்கை..

நேற்று (ஆக.8, 2024) வீடியோ ஆதாரம் வெளியாகி வைரலானது இணையத்தில் வைரலானது. இதையடுத்து நீதிமன்ற காவலில் உள்ள' அம்மூவரையும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் கடந்த வருடம் தாக்கினாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என தாம்பரம் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே சிவக்குமார் அவரின் நடத்தைக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வைரலான 2023 வீடியோ.. சிறப்பு காவல் துணை ஆய்வாளர் மீது பாய்ந்த நடவடிக்கை..
கடுமையாக தாக்கிய எஸ்.எஸ்.ஐ சிவகுமார்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 09 Aug 2024 12:24 PM

தாம்பரம் காவல் துறை: ஆகஸ்ட் 17, 2023-ல் முன்விரோதம் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட 2 பேரை புகாரின் கீழ் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்ற சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார், காவல் நிலையத்தில் அவர்களை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று (ஆக.8, 2024) வீடியோ ஆதாரம் வெளியாகி வைரலானது இணையத்தில் வைரலானது. இதையடுத்து நீதிமன்ற காவலில் உள்ள’ அம்மூவரையும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் கடந்த வருடம் தாக்கினாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என தாம்பரம் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே சிவக்குமார் அவரின் நடத்தைக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு கடுமையான கண்டனங்களும் எழுந்து வருகிறது.


சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ 16-08-2023 அன்று 20.30 மணியளவில் T17 பெரும்பாக்கம் PS எல்லைக்கு உட்பட்ட ராதா நகரில் ஜீவநாதன், வெற்றிவேல், ரூபன் மற்றும் சங்கர் ஆகிய மூவரால் முன் விரோதம் காரணமாக சிமிலி மணி என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இதுகுறித்து 17-08-2023 அன்று சிமிலி மணியின் (தி.மு.க. ரேணுகா) தாய் அளித்த புகாரின் பேரில், 717 பெரும்பாக்கம் பி.எஸ்.சி.ஆர்.எண்:216/2023 u/s 341,294(பி), 324,307, 506 ஆகிய எண்களில் ஒரு வழக்கு. (ii) IPC பதிவு செய்யப்பட்டு சுமார் 19.00 மணி நேரத்தில் சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட ரூபன் (ஏ3), சங்கர் (ஏ4) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீஸ் நிலையத்திற்குள் பிளாஸ்டிக் பைப்பால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிவக்குமார் எஸ்எஸ்ஐ சில அடி கொடுத்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெரியாத சிலரால் வீடியோ எடுக்கப்பட்டது, மேலும் இது 07-08- 2024 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

Also Read: விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல தடை.. ஏன் தெரியுமா?

இந்நிலையில் உண்மை கண்டறியப்பட்டதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த பள்ளிக்கரணை மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், SSI Tr. சிவக்குமார் தனது நடத்தைக்காக காவல்துறையில் இருந்து மாற்றப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News