விழுப்புரம் அருகே தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை! - Tamil News | Pregnancy after 10 years Child born in the morning Burial of husband in the evening in villupuruam | TV9 Tamil

விழுப்புரம் அருகே தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை!

Published: 

31 May 2024 15:23 PM

உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுவரை அவருக்கு குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில்தான் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சாரதி இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை!

மாதிரிப் படம்

Follow Us On

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த கட்டடத் தொழிலாளி சாரதியின் இறுதிச் சடங்கின் போது அவரது மனைவி சத்தியபிரியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து கர்பமான சத்தியபிரியா குழந்தை பிறந்தும் கணவனை இழந்ததால் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சாரதி. இவருக்கு வயது 28. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுவரை அவருக்கு குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில்தான் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சாரதி இறந்துள்ளார்.

சாரதி  கடந்த 23-ஆம் தேதி வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் ஸ்ரீதரின் என்பவரின் விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த நீளமான இரும்புக் கம்பியை தூக்கியபோது, மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சாரதி பலத்த காயமடைந்தார். சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சாரதி  சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த சாரதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுவரை அவருக்கு குழந்தை இல்லாத நிலையில் தற்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில்தான் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சாரதி இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also read… தூத்துக்குடியில் ஆளில்லா கிராமம்… இருந்த ஒரேயொரு முதியவரும் இறந்ததால் காலியான ஊர்!

நேற்று சாரதிக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று முடிந்த நிலையில் அவருடைய மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தியபிரியாவிற்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பேறு இல்லாமல் 10 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில் தற்போது குழந்தையின் முகத்தை பார்க்காமல் சாரதி உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தங்களது வருத்தத்தை  வெளிப்படுத்தியுள்ளனர்.

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version