School Leave: கனமழையால்கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடையும் சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (அக்டோபர் 23) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவதாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கோவையில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே கோட்டைப் பிரிவில் இருந்து ஒன்னிபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அங்கிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவையில் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடையும் சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அக்டோபர் 21 ஆம் தேதி மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. தற்சமயம் ஒரிசாவுக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்துக்கு தெற்கு- தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், வங்கதேசத்துக்கு தெற்கு- தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 23 ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையிலேயே நகர்ந்து அக்டோபர் 24 ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே 24 ஆம் தேதி இரவு அல்லது 25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, புதுச்சேரியில் இருந்து புறப்படும் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.