ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரம்.. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.. - Tamil News | tamil actress parvathy nair booked under case for torturing her employee know more in detail | TV9 Tamil

ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரம்.. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு..

Updated On: 

21 Sep 2024 14:32 PM

நடிகை பார்வதி நாயர், இவரது வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாகவும், பணியாளர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் பணியாளர் புதுக்கோட்டை சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு முன்பாக தேனாம்பேட்டையில் தான் தங்கியிருந்த அறையில் வைத்து அந்த ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது சுபாஷ் புகார் அளித்திருந்தார்.

ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரம்.. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு..

பார்வதி நாயர்

Follow Us On

நடிகை பார்வதி நாயர் உள்ளிட்ட ஆறு பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க் சாலை பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர், இவரது வீட்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாகவும், பணியாளர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் பணியாளர் புதுக்கோட்டை சுபாஷ் சந்திரபோஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு முன்பாக தேனாம்பேட்டையில் தான் தங்கியிருந்த அறையில் வைத்து அந்த ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது சுபாஷ் புகார் அளித்திருந்தார். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுபாஷ் முறையீட்டு் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இன்று கனமழை.. 3 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

இதை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் பார்வதி நாயர் உள்ளிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் தேனாம்பேட்டை போலீசார் பார்வதி நாயர் எடப்பாடி ராஜேஷ் இளங்கோவன் செந்தில் அருண் முருகன் அஜித் பாஸ்கர் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னிந்தியாவின் மாஸ் நடிகை தான் இந்த சிறுமி
கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்..
பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
Exit mobile version