Dindigul Crime News: காதல் பிரச்சனையால் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. அதிர்ச்சியில் மக்கள்.. - Tamil News | tamil nadu dindugal district 17 year old girl was shot by his boyfriend has created a stir know more in detail in tamil | TV9 Tamil

Dindigul Crime News: காதல் பிரச்சனையால் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. அதிர்ச்சியில் மக்கள்..

Updated On: 

09 Sep 2024 12:18 PM

திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மதுரை மேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வம் காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உறவினர் வீட்டு கல்யாணத்தில் கலந்துக்கொள்வதற்காக செல்வம் சென்றுள்ளார். அங்கே விசேஷ வீட்டில் தனது காதலியான 17 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார்.

Dindigul Crime News: காதல் பிரச்சனையால் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. அதிர்ச்சியில் மக்கள்..

கோப்பு புகைப்படம் (pic courtesy)

Follow Us On

நாட்டுத்துப்பாக்கியால் சிறுமியை சுட்ட இளைஞர்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 17 வயது சிறுமியை நாட்டுத்துப்பாக்கியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மதுரை மேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வம் காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், உறவினர் வீட்டு கல்யாணத்தில் கலந்துக்கொள்வதற்காக செல்வம் சென்றுள்ளார். அங்கே விசேஷ வீட்டில் தனது காதலியான 17 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். அப்போது செல்வத்திற்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க: பாராலிம்பிக்கில் 29 பதக்கங்கள்.. டோக்கியோ பதக்க சாதனையை முறியடித்து அசத்தல்!

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் உறவினர் வீட்டில் இருக்கும் நாட்டு துப்பாக்கியை எடுத்து சிறிமியை காண் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அந்த சிறுமியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்து போன செல்வம், ஆத்திரத்தில் தவறு செய்து விட்டோம் என வருந்தியுள்ளார். மேலும் அவரும், எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் படிக்க: பேச்சுலர், ராட்சசன் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒன்று கூடி இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது சிறுமியை, ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version