5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amudham Angadi: தீபாவளி சிறப்பு தொகுப்பு.. அமுதம் அங்காடியில் மொத்தம் 15 பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

அமுதம் அங்காடி: தீபாவளி பண்டிகையையொட்டி, அமுதம் பல்பொருள் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் தொகுப்பு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மளிகை தொகுப்பை மக்கள் சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் பெற்றுக் கொள்ளலாம்.

Amudham Angadi: தீபாவளி சிறப்பு தொகுப்பு.. அமுதம் அங்காடியில் மொத்தம் 15 பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
அமுதம் அங்காடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Oct 2024 12:56 PM

தீபாவளி பண்டிகையையொட்டி, அமுதம் பல்பொருள் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைவரும் தயாராகி வருகின்றனர். வீடுகளில் இனிப்பு சமைத்தும், புத்தாடை வாங்கியும் வருகின்றனர். இந்த சூழலில் தமிழக அரசு தீபாவளியை முன்னிட்டு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது,  தீபாவளி பண்டிகையையொட்டி, அமுதம் பல்பொருள் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளது.

அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு

சென்னையில் உள்ள 9 அமுதம் பல்பொருள் அங்காடியிலும் 15 மளிகை பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்’ என்ற தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் அமுதம் பிளஸ் என்ற மளிகை தொகுப்பின் விற்பனையை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். 15 மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் தொகுப்பு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மளிகை தொகுப்பில் கடுகு, உடைத்த உளுந்து, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய் தனியா, புளி, உப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை, பெருங்காயத்தூய் ஆகிய பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த மளிகை தொகுப்பை மக்கள் சென்னையில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இது விரையில் அனைத்து ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக தற்போது சென்னையில் உள்ள அமுதம் அங்காடியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read: தீபாவளி விடுமுறை.. கார்களில் சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரூட்டில் போகாதீங்க.. அமைச்சர் அறிவிப்பு!

சென்னையில் எங்கெல்லாம் இருக்கு?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அமுதம் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களான பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை சில்லறை விலையை விட குறைவாக விற்பனைப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.  இதுவரை சென்னையில் 22 அமுதம் பல்பொருள் அங்காடியும், கடலூர் மாவட்டத்தில் 5 அமுதம் பல்பொருள் அங்காடியும் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் அண்ணா நகர், நந்தனம், அசோக் நர், இந்திரா நகர், சிபிஆர் சாலை, பெரியார் சாலை, எம்.எம்.டி.ஏ காலனி, ஆர்.கே.மட் சாலை, கோபாலபுரம், அண்ணா நகர் மெயின், போரூர், சின்மயர் நகர், போரூர், அண்ணா நெடுஞ்சாலை, தாம்பரம், கே.கே.நகர், முனுசாமி நகர், சாந்தி காலனின, ஆற்காடு சாலை, ஆவடி, திருவான்மியூர், வி.எம்.தெரு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Also Read: தொடர் கனமழை.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

அதேபோல, கடலூரில் நெய்வேலி தொகுதி 17, நெய்வேலி தொகுதி 19, நெய்வேலி தொகுதி 29, ஏடிஎஸ் மண்டல அலுவலக வளாகம், திருப்பதாதிரிபுலியூர் ஆகிய இடங்களில் அமுதம் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த மேற்கண்ட இடங்களில்  உள்ள அமுதம் அங்காடியில் மக்கள் தீபாவளி சிறப்பு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Latest News