TVK Conference: இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய் 3வது முறையாக கடிதம்!
இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள் எனவும் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாம் கழகத்தின் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு 3வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்காக மூன்றாவது முறையாக கடிதம் எழுதுகிறேன். மாநாடு நிகழப்போகும் அந்த தருணம் நமது மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகிறது. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள் எனவும் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நாம் கழகத்தின் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்த உறுதிப்பூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். வி சாலை வியூகச் சாலையில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலை என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.