5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஜூன் 24ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் குழு கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நடப்பாண்டிற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. பின்னர், தமிழ்நாடு பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அப்பாவு அறிவித்திருந்தார்.

ஜூன் 24ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. என்ன காரணம்?
சட்டப்பேரவை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jun 2024 17:09 PM

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் குழு கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 2024ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 24ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை-600009 தலைமைச் செயலகத்தில் உளள சட்டமன்றப்பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூடியுள்ளார்கள்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: திருமா, சீமானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்.. பரபரப்பாகும் தமிழக அரசியல்!


நடப்பாண்டிற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. பின்னர், தமிழ்நாடு பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அப்பாவு அறிவித்தார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைள் தொடர்பான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Latest News