5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

தனியார் பேருந்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேருந்தில் சாரதா படிகட்டிற்கு எதிராக இருக்கும் பகுதியில் நின்றுகொண்டிருப்பதும், சாராத எதையும் பிடிக்காமல் பின் இருந்த கம்பியை மட்டுமே சப்போர்டாக வைத்து நின்று பயணித்ததும் இடம்பெற்றிருந்தது. மேலும், பேருந்து வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி சாரதா பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் பார்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது.

Watch Video: பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 05 Jul 2024 14:19 PM

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்து, வளைவில் திரும்பிய போது பேருந்தில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டதில், பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் படுங்காயுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாரதா. இவர் தனது மகள் திருமணத்திற்காக சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்று துணி எடுத்துவிட்டு மீண்டும் மாலை சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் திரும்பியுள்ளார். அப்போது ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதி வளைவில் தனியார் பேருந்து திரும்பிய போது பேருந்தில் இருந்த சாரதா எதையும் பிடிக்காமல் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டார்.


பின்னர் தனியார் பேருந்து நிறுத்திய ஓட்டுனர் மற்றும் பயணிகள் உடனடியாக சென்று பார்த்தனர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயம் அடைந்த சாரதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

மேலும், தனியார் பேருந்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேருந்தில் சாரதா படிகட்டிற்கு எதிராக இருக்கும் பகுதியில் நின்றுகொண்டிருப்பதும், சாராத எதையும் பிடிக்காமல் பின் இருந்த கம்பியை மட்டுமே சப்போர்டாக வைத்து நின்று பயணித்ததும் இடம்பெற்றிருந்தது. மேலும், பேருந்து வளைவில் திரும்பிய போது நிலை தடுமாறி சாரதா பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் பார்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது.

இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், பலரும் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

Also Read: கள்ளக்குறிச்சியை தொடர்ந்து விழுப்புரம்.. கள்ளச்சாராயம் அருந்தி முதியவர் உயிரிழப்பு.. பாமக கண்டனம்..

Latest News