பிரபல கொலை குற்றவாளி சீர்காழி சத்யா.. துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்.. - Tamil News | | TV9 Tamil

பிரபல கொலை குற்றவாளி சீர்காழி சத்யா.. துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..

Sirkazhi Sathya: நேற்று மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வழக்கறிஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு குற்றவாளிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் பிரபல ரவுடியாக வளம் வந்த நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட ரவுடிகள் கலந்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது விருந்து, போதை வஸ்துகள், சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல கொலை குற்றவாளி சீர்காழி சத்யா.. துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..

சீர்காழி சத்யா

Published: 

28 Jun 2024 15:07 PM

சென்னை: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சத்யா (வயது 45) கொலை குற்றவாளி. கடந்த 2005 இல் ரவுடி டெலிபோன் ரவி வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழ்நாடு முழுவதும் 6 கொலை வழக்குகள், என மொத்தம் 11 கொலை வழக்குகள் மற்றும் 4 கொலை முயற்சி உள்பட 32 வழக்குகளில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளி சீர்காழி சத்யா. மேலும் 2010 இல் அமைச்சர் கே.என் நேரு சகோதரர் திருச்சி ராம ஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனையில் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வழக்கறிஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு குற்றவாளிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியில் பிரபல ரவுடியாக வளம் வந்த நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட ரவுடிகள் கலந்து கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது விருந்து, போதை வஸ்துகள், சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இது குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தேடப்படும் குற்றவாளிகள் யாராவது அங்கு இருந்தால் அவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு தனி படை , பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, கார் முழுவதும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் கார் அங்கு வந்திருந்தது. போலீசார் தணிக்கையில் ஈடுபட்டபோது அங்கு கார் நிறுத்தாமல் அதிவேகத்தில் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தனி படை போலீஸ் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். அந்தக் காரில் சீர்காழி சத்யா தனது கூட்டாளிகளுடன் பயணம் செய்தது தெரியவந்தது.

மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பழவேலி வழியாக சென்னை நோக்கி செல்லும் பொழுது, போலீசார் தன்னை பின் தொடர்ந்து வருவதை சத்யா கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து பழவேலி மலைப்பகுதி நோக்கி சத்யா தனது கூட்டாளிகளுடன் தப்பிஓடி உள்ளார். தப்பி ஓடும் ரவுடியை பிடிப்பதற்காக போலீசார் முயற்சி செய்த பொழுது , உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாரை சத்யா தாக்கியுள்ளார். போலீசார் எச்சரிக்கை மீறியும் சத்யா தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது போலீசார் சத்யாவை நோக்கி சுட்டதில் இடது காலில் சத்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்து சத்யாவை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சத்யாவின் வலதுகரமான தஞ்சாவூர் பகுதி சேர்ந்த பால்பாண்டி, திருவாரூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மாரிமுத்து ஆகிய நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரவுடி ஒருவர் என்கவுண்டரில் இருந்து தப்பிய சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஜியோவை தொடர்ந்து ஏர்டல் நிறுவனம் கொடுத்த ஷாக்.. அனைத்து ரிசார்ஜ் பிளான் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு..!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!