5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: முக்கிய மாவட்டங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு.. எந்தெந்த பகுதிகளில்?

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதியான இன்று தமிழகத்தில் சென்னை, கோவை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tamilnadu Powercut: முக்கிய மாவட்டங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு.. எந்தெந்த பகுதிகளில்?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 17 Oct 2024 07:40 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, கோவை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.

மின்தடை:

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதியான இன்று தமிழகத்தில் சென்னை, கோவை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..

எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை?

சென்னை:

டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, ஆர்.கே.நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி & தொண்டியார்பட் பகுதி (தவிர), சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்:

சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம்(பகுதி), செல்வபுரம், அண்ணா நகர் வீட்டுவசதி பிரிவு, சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்!

கடலூர்:

கேப்பர் மலைகள், திருப்பாபுலியூர், வண்டிப்பாளையம், பத்திரிக்குப்பம், சுத்துக்குளம், எம் புதூர், செல்லங்குப்பம்,கோ பூவனூர், அம்மாரி, ஆசனூர், எம் அனலூர், வடவாடி, மங்கலம்பேட்டை, தோப்புக்கொல்லை, கன்னடி, அகரம்.இ.கே.பட்டு,, சாந்தப்பேட்டை, பி.என்.குப்பம், குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, சுப்ரமணியபுரம், அன்னவல்லி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

தர்மபுரி:

மொரப்பூர் நகரம், வாங்குதனூர், தென்னம்பட்டி, குருவம்பட்டி, நைனாகோவம்பட்டி, வெற்றிப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, தம்பிசெட்டிபட்டி, அவலம்பட்டி, மோட்டூர், அனல்நகர், எல்லவாடி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

சேந்தநாடு, சாத்தனூர், எறையூர் , குமாரமங்கலம், உளுந்தூர்பேட்டை டவுன்,பு.மாம்பாக்கம், சேந்தமங்கலம் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

கரூர்:

மண்மங்கலம், குப்புச்சிபாளையம்கிருஷ்ணகிரி: சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:

அரனாரை, ரூரல், எலம்பலூர், மின் நகர், பாலகரை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை:

பூலாங்குளம் பகுதி, குளத்தூர் என்.பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

சேலம்:

டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி, ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்முனை ரோடு, பில்லுகடை, லைன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

ஈரோடு:

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ், கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநகர், ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ், சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

சிவகங்கை:

திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், தென்கரை, மல்லக்கோட்டை, கருப்பூர், திருப்பட்செட்டி, பழையனூர், மரநாடு, திருப்புவனம், சிலைமான் மடபுரம், பழையனூர்,கீழடி, பொட்டப்பாளையம், காஞ்சிரங்குளம், கரிசல்குளம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Latest News