5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ!

மின்தடை: தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கரூர், திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. எந்தெந்த மாவட்டங்களில்? லிஸ்ட் இதோ!
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 Sep 2024 19:20 PM

தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கரூர், திருப்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.   தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செபடம்பர் 17ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மதுரை, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: ரெடியா தோழர்களே… விஜய்யின் முதல் மாநாடு.. தேதி குறித்த த.வெ.க தொண்டர்கள்

எந்தெந்த மாவட்டங்கள்?

மதுரை

மதுரை மாவட்டத்தில் அனுப்பானடி, தெப்பம், காமராஜ்ர்சாலை, அரசமரம், லக்ஷிமிபுரம், இஸ்மாயில்புரம், ஜராவதநல்லூர் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரதெரு, ஆடுதுறை, பாபநாசம், கபிஸ்தலம், கரம்பயம், ஆலந்தூர், சாக்கோட்டை, கும்பகோணம், தாராசுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, கிருஷ்ணபுரம் பூலாம்பாடி, பெரியவடகரை, எசனை, திருப்பெயர், ஆலம்பாடி, திருப்பெயர், எஸ்.புதூர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம் முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், நாகமங்கலாம், உரிகம், தக்கட்டி, மருதனப்பள்ளி, தண்டரை, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம், தேவனாம்பட்டி, லிங்கம்பட்டி, ராயக்கோட்டை டவுன் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் எட்டயபட்டி, வாரபாளையம், எஸ்கேடி, ஆர்டி உதியூர் புளியம்பட்டி, பொதியபாளையம், செல்வம், ராசாத்தவலசு மேட்டுப்பாளையம், வேலக்கோயில், பாப்பினி, டி.என்.பட்டி, வேப்பம்பாளையம், உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு, சாத்தனூர், எறையூர், குமாரமங்கலாம், சேந்தமங்கலாம் நீதிமன்றம், பு.மாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் புலியூர், வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை மணவாசி, சாலப்பட்டி, லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாம்பாக்கம் வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், அனந்தபுரம், சேந்தமங்கலம், தக்கோலலம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்:

குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, சுப்ரமணியபுரம், அன்னவல்லி, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக் கொல்லை, தோப்புக் கொலை, துப்புக்கொல்லை, கண்ணாடி, அகரம், இ.கே.பட்டு, சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

திருவாரூர்:

வலங்கியமான், ஆலங்குடி, மருவத்தூர், கோவிந்தக்குடி வலக்கியமான், மருவத்தூர் உள்ளிட்ட பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News