Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மின்தடை.. சென்னையில் எங்கே? - Tamil News | tamilnadu powercut 4th september 2024 Wednesday salem trichy chennai and other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மின்தடை.. சென்னையில் எங்கே?

Updated On: 

04 Sep 2024 09:00 AM

பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மின்தடை.. சென்னையில் எங்கே?

கோப்பு புகைப்பட்டம் (image courtesy: pixabay)

Follow Us On

மின்தடை: மின்மிகை மாநிலம் என சொல்லப்படுகிற தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இத்தகைய பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று  மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  (04.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் மின்தடை?

  • தேனி: குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, சின்னமனூர், பல்லவராயன்பட்டி ஆகிய பகுதிகள்
  • உடுமலைப்பேட்டை: எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர் ஆகிய பகுதிகள்
  • திருச்சி: கருமலை, பன்னங்கொம்பு, சமத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம் ஆகியவை சுற்றியுள்ள இடங்கள்
  • சேலம்: ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி  ஆகிய பகுதிகள்
  • விருதுநகர்: சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி ஆகிய பகுதிகள்
  • சென்னை: டி.ஐ.சைக்கிள் மற்றும் மேனாம்பேடு, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை ஆகியவை சுற்றியுள்ள பகுதிகள்
  • செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருநின்றவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரம்பலூர்: இங்கு சின்னார், எரியு,  முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏழுமூர்,திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய பகுதிகள்
  • கோயம்புத்தூர்: கிருஷ்ணகவுண்டபுதூர்,செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய பகுதிகள்
  • தஞ்சாவூர்: ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய பகுதிகள்
இந்த கியூட் பையன் இப்போ பெரிய நடிகர்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
Exit mobile version