கருவில் பெண் சிசு என தெரிந்து கருகலைத்த பெண் உயிரிழப்பு.. புதுக்கோட்டையை அதிர வைத்த சம்பவம்.. - Tamil News | tamilnadu pudukottai female fetus women underwent dnc died unfortunately | TV9 Tamil

கருவில் பெண் சிசு என தெரிந்து கருகலைத்த பெண் உயிரிழப்பு.. புதுக்கோட்டையை அதிர வைத்த சம்பவம்..

எந்த மருத்துவமனையாக இருந்தாலும் கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவிக்க கூடாது. அப்படி தெரிவித்தால் மருத்துவர் மீதும் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி சட்டங்கள் இருந்தாலும் ஆங்காங்கே கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுக்கொலை நடந்து வருகிறது.

கருவில் பெண் சிசு என தெரிந்து கருகலைத்த பெண் உயிரிழப்பு.. புதுக்கோட்டையை அதிர வைத்த சம்பவம்..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Aug 2024 12:13 PM

புதுக்கோட்டை கருகலைப்பு சம்பவம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை பெண் என தெரிந்தவுடன் கருகலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் கரிவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதித்து பார்ப்பது சட்டப்படி குற்றம். கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தால் அந்த கருவை கலைக்கும் முயற்சிகள் அதிகம் நடந்து வந்த நிலையில் அதனை தடுக்கவே இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் ஒரு சில இடங்களில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசு குறித்து தகவல் தெரிவிக்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் இது போன்ற கும்பல் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: விசேஷ நாளான இன்று தங்கம் விலை உயர்ந்ததா? ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

மேலும் எந்த மருத்துவமனையாக இருந்தாலும் கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவிக்க கூடாது. அப்படி தெரிவித்தால் மருத்துவர் மீதும் மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி சட்டங்கள் இருந்தாலும் ஆங்காங்கே கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுக்கொலை நடந்து வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை காசு வாங்கி சட்டவிரோதமாக சொல்லி வந்துள்ளது. நேற்று பெண் ஒருவர் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய வந்துள்ளார். அப்போது கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்த உடன் அந்த குழந்தையை கலைத்துவிட முடிவு செய்துள்ளார். அதன்படி தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்த போது அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: முத்தமிழறிஞருக்கு நாணயம்.. பாஜக அரசுக்கு கண்டனம்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி போராட்டம் நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்த உடன் அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!