Youtuber Irfan: இர்ஃபான் விவகாரம்.. 10 நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை, ரூ.50 ஆயிரம் அபராதம்!
இர்ஃபான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய காட்சிகள் கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
யூட்யூபர் இர்ஃபான்: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது மனைவிக்கு பிரசவம் நடந்த நிகழ்வை தொகுத்து வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இர்ஃபான் தனது குழந்தைக்கு தொப்புள் கொடியை வெட்டிய காட்சிகள் கடும் சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவிக்க மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சோழிங்கநல்லூரில் இருக்கும் அந்த மருத்துவமனை அடுத்த 10 நாட்கள் செயல்பட தடை விதித்து மாநில பொது சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் எனவும், புதிதாக நோயாளிகளை அனுமதிக்ககூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.