5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் – விஜய் பேச்சு

Thalapathy Vijay: இந்த பிளவு வாத சக்திகளை கூட நாம ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஏன்னா அது ஒரு மதம் பிடிச்ச யானை மாதிரி. அது பன்ற அராஜத்துலேயே அது நம்ம கண்ணுக்கு தெரிஞ்சுடும். ஆனா இந்த ஊழல் இருக்கே.. அது எங்க ஒளிஞ்சு இருக்கு, எப்படி ஒளிஞ்சு இருக்கு, எந்த ஃபார்ம்ல ஒளிஞ்சுருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.

பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் – விஜய் பேச்சு
விஜய்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Oct 2024 21:35 PM

பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய் முதல்முறையாக இன்று தனது கட்சி சார்பில் மாநாட்டை நடத்தினார். விழுப்புரம் மாவட்டத்தி உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தபோது தொண்டர்கள் ஆரவாரத்துடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் வரவேற்புரை, கட்சி உறுதிமொழி, கட்சிக் கொள்கைகளைப் படித்த பிறகு விஜய் தொண்டர்களிடையே பேசத் தொடங்கினார். அப்போது பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் என்று மத்திய அரசான பாஜகவையும், மாநில அரசான திமுகவையும் நேரடியக சாடினார் விஜய்.

மாநாட்டில் பேசத் தொடங்கிய விஜய் குழந்தை கதை சொல்லி குழந்தை போல எதற்கும் பயப்படாமல் அரசியலில் செயல்படுவேன் என்று தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன், பின் வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய விஜய் நம் கட்சியின் கொள்கையே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”. நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான். நம்மல பொருத்த வரை எல்லாருமே ஒன்னுதான். எல்லாரும் சமம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய விஜய், இந்த அரசியல்லாம் எதுக்குங்க.. நாமபாட்டுக்கு நடிச்சோமா, நாளு காசு பாக்கலாமானுதான் நானும் இருந்தே. ஆனா நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது சுயநலம் இல்லையா? நம்மல வாழ வச்ச இந்த மக்களுக்கு எதுவும் செய்யாம இருப்பது நல்ல விசுவாசமா இருக்குமா? ஒரு லெவலுக்கு மேல காசு சேத்து என்ன செய்யப்போறோம். நமக்கு இந்த வாழ்கைய கொடுத்த மக்களுக்கு நாம என்னதான் செய்யப்போறோம் என்ற கேள்வி எனக்குள்ள இருந்துந்துகிட்டே இருந்துச்சு.

Also read… முடிவோடு தான் வந்திருக்கிறேன்.. பின் வாங்கும் எண்ணம் இல்லை – மாநாட்டில் விஜய் பேச்சு

இந்த எல்லா கேள்விகளுக்கு ஒரு விடைய கண்டுபிடிக்க யோசிச்சப்போதான் ‘அரசியல்’ அப்படின்ற ஒரு விடை கிடைத்தது. இந்த அரசியல் சரியா வருமா, நாம இயல்புக்கு இது செட்டாகுமானு நிறைய கேள்வி வந்துச்சு ஆனா இதெல்லாம் யோசிட்டு இருந்தா எதும் செய்ய முடியாது. சில விசயங்களை பின்விளைவுகள் பார்க்காம எறங்கி செஞ்சாதான் நம்மள நம்புறவங்களுக்கு நல்லது செய்ய முடியும்னு தோனுச்சு. அதான் எறங்கிட்டேன் இனி எத பத்தியும் யோசிக்கப்போறது இல்ல.

தொடர்ந்து பேசிய விஜய் அரசியலில் பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் என்று தெரிவித்தார். பிளவுவாதிகளும் ஊழல்வாதிகளும் நமக்கு எதிரிகள் என்று மத்திய அரசான பாஜகவையும், மாநில அரசான திமுகவையும் நேரடியக சாடினார் விஜய். மேலும் இந்த பிளவு வாத சக்திகளை கூட நாம ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஏன்னா அது ஒரு மதம் பிடிச்ச யானை மாதிரி. அது பன்ற அராஜத்துலேயே அது நம்ம கண்ணுக்கு தெரிஞ்சுடும். ஆனா இந்த ஊழல் இருக்கே.. அது எங்க ஒளிஞ்சு இருக்கு, எப்படி ஒளிஞ்சு இருக்கு, எந்த ஃபார்ம்ல ஒளிஞ்சுருக்குனு கண்டுபிடிக்கவே முடியாது.

கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும், களாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும், அதுக்கு முகமே இருக்காது. முகமூடிதான் போடும் முகமூடிதான் முகமே. இப்படி முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்ப நம்ம கூடவே இருந்துகிட்டு நம்மல ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமா, நான் திரும்ப சொல்கிறேன் நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி இந்த ஊழல்வாதிகள் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

Latest News