Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் தீவிரம்.. - Tamil News | | TV9 Tamil

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் தீவிரம்..

நாளை விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. நாளை வாக்குப்பதிவு.. ஏற்பாடுகள் தீவிரம்..

கோப்பு புகைப்படம்

Published: 

09 Jul 2024 12:19 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit), 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பதற்றமான வாக்கு சாவடி 44 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக உள்ள சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 Also Read: 2.5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு பிஎஃப் செலுத்தாத ஸ்பைஸ்ஜெட்.. RTI மூலம் வெளியான உண்மை!

மூன்றாண்டு கால திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளிக்கும் அங்கீகாரமாக, அதிக வாக்குகள் வத்தியாசத்தில் வென்று தொகுதி தக்க வைக்க திமுகவும், அதைத் தட்டிப் பறிக்க பாமகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில், அக்கட்சியினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல், நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் 10.07.2024 அன்று நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு நடைபெறும் நாளான 10.07.2024 அன்று விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் அரசுத் துறை, பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசாணை எண். 449, Public (Miscellaneous) Department .27.06.2024 – Under the “Explanation” to Section 25 of the Negotiable Instruments Act, 1881 (Central Act, XXVI of 1881)-01 19 அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!