5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Party : தவெக மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்.. அடுத்தது என்ன?

Police Permission | விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அப்போது மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என அவர் கருதுகிறார். எனவே, மாநாடு தள்ளிப்போகும் பட்சத்தில் வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

TVK Party : தவெக மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை.. சூடு பிடிக்கும் அரசியல் களம்.. அடுத்தது என்ன?
விஜய்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Sep 2024 10:51 AM

த.வெ.க கட்சி மாநாடுக்கு அனுமதி : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு  வரும் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்காத பட்சத்தில் மாநாட்டை வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அப்போது மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என அவர் கருதுகிறார். எனவே, மாநாடு தள்ளிப்போகும் பட்சத்தில் வருகிற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு பதில் அளித்த புஸ்ஸி ஆனத், ”காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாங்கள் உரிய பதில் அளிப்போம். அதற்கான ஆலோசனையில் கட்சியின் சட்டப்பிரிவு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கட்சியின் மாநாடு தள்ளிப்போக வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : CM MK Stalin Speech : “தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்த அன்பு உடன்பிறப்புகள் நாம்”.. வட அமெரிக்க தமிழ்ச் சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தவெகவின் மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தாவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திட்டமிட்டபடி, தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தொடர்களும், ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் என நான்கு முணை போட்டி நடந்து வருகிறது. இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து விஜய்யின் த.வெ.க கட்சி களமிறங்க உள்ளது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் தவெக கட்சி அதன் முதல் மாநாடு குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Accident : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையே தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது மாநாடுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவற்றை குறித்து விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News