5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: வரதட்சணைக்காக காஃபியில் விஷம்.. இளம்பெண்ணை கொன்ற கணவன் குடும்பம்.. திடுக் வாக்குமூலம்!

நீலகிரியில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் காஃஃபியில் விஷம் கலந்து கொடுத்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்த கணவன், கணவனின் சகோதரர், அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஊட்டியில் உள்ள ஒரு கடையில் நகைக்கு  பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காஃபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்துள்ளனர்.

Crime: வரதட்சணைக்காக காஃபியில்  விஷம்.. இளம்பெண்ணை கொன்ற கணவன் குடும்பம்..  திடுக் வாக்குமூலம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Sep 2024 16:23 PM

வரதட்சணைக்காக காஃபியில் விஷம்: நீலகிரியில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் காஃஃபியில் விஷம் கலந்து கொடுத்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்த கணவன், கணவனின் சகோதரர், அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி பென்னட் பகுதியை சேர்ந்தவர் ஐவஹருல்லா (50). இவருடைய மனைவி யாஸ்பின். இந்த தமிபதிக்கு இம்ரான் (27), முக்தார் (24) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இம்ரான் ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த ஆஷிகா பர்வீன் (22) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்னர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில், ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவன், அவரது குடும்பத்தினர் கூறினர்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை… எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

ஆனால், ஆஷிகா பர்வீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டினர். இதுகுறித்து ஊட்டி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காஃபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதிர்ச்சி வாக்குமூலம்:

விசாரணயில், ஆஷிகா பர்வீனின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதில் ஏற்பட்ட பிரச்னையில் தான் அவர்கள் ஆஷிகாவுக்கு காஃபியில் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் ஒன்று வாங்குவதற்காக முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் குறைவான பணம் இருப்பதால், இம்ரானின் மனைவி ஆஷிகாவிடம் ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணையாக வீட்டில் வர வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

Also Read: தமிழ்நாட்டில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!

இதனால் இவர்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆஷிகாவை கொலை செய்த இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு கடையில் நகைக்கு  பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காஃபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்துள்ளனர். இதையடுத்து, இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வரதட்சணைக்காக இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News