Telegram Ban In India : டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்! - Tamil News | Telegram app will be banned in India if the charges against the app proved said government official | TV9 Tamil

Telegram Ban In India : டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!

Published: 

27 Aug 2024 13:29 PM

Pavel Durov | மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Telegram Ban In India : டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

டெலிகிராம் செயலி  : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலிகளில் ஒன்றகா டெலிகிராம் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் செயலியை பெரும்பாலானோர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிரக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர். டெலிகிராம் செயலி மக்களிடம் இவ்வளவு பிரபலமாக உள்ள நிலையில், இந்த செயலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் – காரணம் என்ன?

டெலிகிராம் செயலி சி.இ.ஓ பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜனை நோக்கி சென்ற போது, பிரான்ஸில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலி, பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்த படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. மேலும் இணையத்தில் சட்ட விரோத செயல்களை செய்வதற்கு டெலிகிராம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் நிறுவனம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமன்றி பயனர்களின் தகவல் மற்றும் விவரங்களை டெலிகிராம் நிறுவனம் அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Redmi Note 13: அதிரடி சலுகையுடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 13.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க

டெலிகிராம் செயலி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்திய அரசு – அதிரடி நடவடிக்கை!

டெலிகிராம் செயலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவற்றை குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒரு வேளை டெலிகிராம் செயலி மீதான இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version