5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Aadi Masam

Aadi Masam

ஆடி மாதம் என்றாலே தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெண் தெய்வமான அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படும் இந்த ஆடியில் அனைத்து விதமான அம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் களைகட்டும். அம்மன் கோயில்களில் ஒவ்வொரு ஆடி வெள்ளி என்பது மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படும். ஆடி வெள்ளிதான் அம்மனுக்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என பல்வேறு விஷேச நாட்களும் இம்மாதத்தில் உண்டு. இந்த மாதத்தில் வரும் பருவகாலத்தில் நல்ல மழை வேண்டியும், நோய்கள் வராமல் தடுக்கவும் வேண்டி அம்மனுக்கு முன்னோர்கள் விரதம் இருந்து திருவிழா கொண்டாடினார்கள். அத்தகைய ஆடி மாத சிறப்புகளை செய்திகளாக நாம் காணலாம்

Read More

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று இந்த கோயிலுக்கு சென்றால் வரம் கிடைக்கும்!

Sri Padmavati Ammavaari Temple: வரலட்சுமி நோன்பு அன்று திருமணமான ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அதேசமயம் தாங்களும் நீண்ட காலம் மஞ்சள் குங்குமத்துடன் நீடுடி வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் விரதம் இருப்பார்கள். நடப்பாண்டு வரலட்சுமி நோன்பு  ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. 

Aadi Masam: ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் அம்மன் கோயில்!

Temple Special: ஆடிமாதம் என்றாலே நம்மைச் சுற்றி இறையருள் பரவும் வகையில் ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு என இம்மாதம் முழுக்க ஒரே கொண்டாட்ட காலம் தான்.

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் வழிபடுவது எப்படி?

Aadi Masam: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தான் வரலட்சுமி நோன்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஆடி மாதம் கடைசி நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு வருகிறது. வரலட்சுமி நோன்புக்கு முதல் நாளான வியாழக்கிழமை வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். பூஜையறை மற்றும் பூஜைக்கு சம்பந்தப்பட்ட பொருட்களை விளக்கி வைக்க வேண்டும். 

Varalakshmi Viratham: வரலட்சுமி நோன்பு எப்போது? – இந்தாண்டு கொஞ்சம் ஸ்பெஷல் தெரியுமா?

Aadi Masam: மகாலட்சுமி விரதம் இருப்பதால் நமக்கு சில பலன்கள் கிடைக்கிறது. தொன்றுத்தொட்டு பல தலைமுறைகளாக மகாலட்சுமி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த விரதத்தை கடைபிடித்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கிறது. குடும்பத்தில் வறுமை அகல்வதோடு செல்வ செழிப்பும் மேலோங்கும்.

Naga Panchami: இன்று நாக பஞ்சமி.. தவறுதலாக கூட இதை செய்யாதீங்க!

Aadi Masam: பாம்புகளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள பண்டிகை தான் நாக பஞ்சமி. இது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் வளர்பிறை திதியின் 5வது நாளில் வரும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான நாக பஞ்சமி ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கான திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது.

Naga Panchami: வருடத்திற்கு ஒருமுறை திறப்பு.. நாக பஞ்சமி நாளில் வணங்க வேண்டிய கோயில்!

Nagchandreshwar Temple: இம்முறை ஆகஸ்ட் 9ம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. எனவே ஆகஸ்ட் 8ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகசந்திரேஸ்வரர் கோயில் திறக்கப்படும் என்றும், மறுநாள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 12 மணி வரை மட்டுமே கோயில் கதவுகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஓராண்டுக்கு நாகசந்திரேஸ்வரா கோவில் மூடப்படும்.

Naga Panchami: நாகபஞ்சமி வழிபாடு.. இப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்!

Aadi Masam: சர்ப்ப தோஷம் என்பது திருமண வரன் அமைவதில் தடை, மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையாமல் இருப்பது போன்ற பிரச்னைகளை உண்டாக்கலாம். இவர்களின் தோஷத்தை போக்க பல்வேறு தலங்கள் உள்ள நிலையில், அவற்றிற்கு செல்வது ஒருபக்கம் இருந்தாலும் நாக தேவதைகளுக்கு என சிறப்பு நாளாக கொண்டாடப்படும் நாக பஞ்சமி தினத்தில் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

Naga Panchami: நாக பஞ்சமி எப்போது? – 5 ராசிக்கு அடிக்கப்போகிறது அதிர்ஷ்டம்!

Aadi Masam: இந்த நாகபஞ்சமி அன்று சித்தியோகமும், ரவியோகமும் சேர்ந்து வருவது கூடுதல் விஷேசமாக பார்க்கப்படுகிறது. நாக பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.36 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 3.14 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அதிகாலை 5.47 மணி முதல் காலை 8.27 மணி வரை தான் வழிபட உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

Thiruvarppu: பசியால் மெலியும் கிருஷ்ணர் சிலை.. கேரளாவில் இப்படி ஒரு கோயிலா?

Thiruvarpu: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட இந்த கோவிலின் கதவுகள் மூடப்படுவதில்லை என்பது சிறப்பான சம்பவமாகும். ஒருமுறை கிரகணத்தின் போது கோவில் கதவு மூடப்பட்டதாகவும்,  பின்னர் கிரகணம் முடிந்து கோவில் கதவுகளை திறந்து பார்த்தபோது, ​​கிருஷ்ணர் சிலை மெலிந்து அவர் இடுப்பில் இருந்த உடை நழுவி விழுந்து கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Srivilliputhur Andal Temple: திருமண வரம் அருளும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்!

Aadi Masam 2024: எல்லாருக்கும் திருமணத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை சரியாக இருக்க வேண்டும், நம் மனம் கவர்ந்தவராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த எண்ணங்கள் நிறைவேற சில கடவுள்கள் வழிதுணைப் புரிவார்கள் என முன்னோர்கள் கணித்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் திருமண வரம் கொடுக்கும் கோயில்களில் ஒன்று.

Aadi Pooram: ஆடிப்பூரம் திருவிழாவுக்கு பேமஸான கோயில்கள் என்னென்ன தெரியுமா?

Aadi Masam: ஆடிப்பூரம் திருவிழா அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அம்மன் பூஜையில் வைக்கப்பட்டு கொடுக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் திருமண வரன், குழந்தை பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் சில முக்கியமான கோயில்களில் ஆடிப்பூரம் திருவிழா கொண்டாடப்படுவது சிறப்பானதாகும்.

Aadi Pooram: ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு.. வீட்டிலேயே செய்வது எப்படி?

Aadi Masam: இறை வழிபாட்டின்போது ஸ்ரீ சக்தி ஓம் சக்தி என்ற மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். எத்தனை முறை சொல்கிறமோ, அந்தளவு பலன் கிடைக்கும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து அந்த குங்கும அம்மனை பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட பழங்களை எடுத்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். பூஜையில் இருந்த பழம் என்பதால் நோய்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன் தெரியுமா?

Aadi Masam: நடப்பாண்டு ஆடிப்பூரம் விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆனால் இதற்கான நட்சத்திரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 06.42 மணிக்கு தொடங்குகிறது.7 ஆம் தேதி இரவு 9.03 மணி வரை இந்த நட்சத்திரம் உள்ளதால் அன்றைய நாளில் ஆடிப்பூர வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். இந்நாளில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெறும்.

Papanasanathar Temple: ஜென்ம பாவங்களை போக்கும் பாபநாசம் கோயில்..!

Papanasam: நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள் யாவும் நம் தலைமுறையினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இதனை தடுப்பதற்கென சில வழிகளும் உள்ளது. அதில் ஒன்று தான் இறை வழிபாடு. அந்த வகையில் நாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கும் தலமாக பாபநாதசாமி கோயில் உள்ளது. பாபநாத சுவாமி கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.

Mangala Gowri Viratham: திருமணம் தடைபடுகிறதா? – பெண்களே இந்த விரதம் இருங்க!

Aadi Masam: ஒருபுறம் பொருளாதாரம் , வெளிப்புற சூழல் தடையாக அமையும். மறுபக்கம் ஜாதகம், கிரகப்பலன்கள் ஆகியவை பிரச்னையாக மாறும். அப்படிப்பட்ட நிலையில் மங்கள கௌரி விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் திருமணத் தடையில் இருந்து விலக்குப் பெறலாம் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.