5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Chennai

Chennai

Chennai – சென்னை

தமிழகத்தின் தலைநகரமாய் திகழ்கிறது சென்னை. 70 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள சென்னை நகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலத்தவரும் வசித்து வருகின்றனர். புகழ்பெற்ற கோயில்கள், நட்சத்திர ஹோட்டல்கள், கடற்கரைகள், ஷாப்பிங் மால்கள் என புதுப்பொலிவுடன் இன்று வரை தலை நிமிர்ந்து நிற்கிறது. சென்னை என்றாலே பலருக்கு இன்றும் நினைவுக்கு வருவது தலைமைச் செயலகம், மெரினா கடற்கரை, தலைவர்கள் சமாதி, கூவம் ஆறு, சென்னை சென்ட்ரல், கானா பாடல், கோடம்பாக்கம், சென்னை சூப்பர் கிங்ஸ், கோயம்போடு என சென்னையின் பல முகங்களில் நினைவு கூறுவார்கள். வேறு சிலர்கள் பொல்யூசன், டிராபிக்கு, வெயில், கூவம் வாசம், வெள்ளம் என டெம்பிளேட்டாக பல காரணங்களை ஓய சொல்லி கொண்டே இருப்பார்கள். ஆனால் எல்லாவற்றிலும் சென்னை இன்று முக்கிய தளமாக விளங்குகிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் என அனைத்திலும் உதாரணமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் கடும் வெள்ளத்தால் சென்னை தத்தளிக்கும். ஆனால் எப்படியான பேரிடராக இருந்தாலும் சென்னை நகரம் அதில் இருந்து மீண்டு வந்து புதுப்பொலிவுடன் இருக்கிறது.

Read More
0

Diwali Special Bus: இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. சென்னை மக்கள் எங்கு செல்ல வேண்டும்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் சென்னையில் இருந்து இயக்கப்படும் தினசரி 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த 3 நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகள் சென்னையில் இருந்தும், மற்ற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் மொத்தம் 14, 086 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather Alert: நவம்பர் 2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இனி பொது இடத்தில் குப்பை கொட்டினால் மாட்டிப்பீங்க.. ஏஐ மூலம் மிரட்டும் சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி: பொது இடங்களில் குப்பை கொட்டுப்படுவதை தடுக்கும் வகையில், ஏஐ தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அம்சம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Crime: சென்னையில் போதைப்பொருள் கடத்தல்.. சிக்கிய முன்னாள் டிஜிபி மகன்!

போதைப்பொருள் கடத்தல்: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய வழக்கில் திடீர் திருப்புமாக முன்னாள் டிஜிபியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் கூட போதைப் பொருள் கலாச்சாரத்துக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி […]

Crime: சென்னையில் டிக்கெட் எடுப்பதில் தகராறு.. தள்ளிவிட்ட பயணி.. நடத்துநர் உயிரிழப்பு!

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் பயணிப்பதால் எப்போதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வசதியாக ஸ்டேஜ் முடிப்பதற்காக ஆங்காங்கே சாலை ஓரங்களில் ஒரு சில நிமிடங்கள் பேருந்து நிறுத்தப்படுவது வழக்கம். இதனிடையே சென்னை மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு 46ஜி என்ற எண்ணுடைய மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Traffic Diversion: வாகன ஓட்டிகளே! – சென்னை அடையாறில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

Chennai: சென்னை பல்வேறு இடங்களிலும் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒரு வழிசாலையாக இருந்த அடையார் மேம்பாலம் இரு வழி சாலையாக மாற்றப்படுகிறது. திரு.வி.க., பாலத்தில் இருந்து அடையாறு திருவான்மியூர் பெசன்ட் நகர் ஓஎம்ஆர் மற்றும் மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வழக்கம்போல் செல்லலாம்.

E Coli Bacteria: சென்னை குடிநீரில் 75% E Coli பாக்டீரியா.. ஐஐடி ஆய்வில் சொன்ன பகீர் தகவல்.. எப்படி பாதுகாத்துக்கொள்வது?

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுசான் ககன் மற்றும் ஐஐடி மெட்ராஸின் நீர் தரத் திட்டத்தின் பாட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுசான் ககன் கூறுகையில், "தண்ணீர் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துபவர்கள் கூட எப்போதும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதில்லை. இதற்கு காரணம் ஒழுங்கற்ற முறையில் அதனை பராமரிக்கதது தான்” என தெரிவித்துள்ளார்.