5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Edappadi K Palaniswami

Edappadi K Palaniswami

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. இவர் 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். சேலம் மாவட்டத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவருக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் 1974ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த அவர், கோணேரிப்படி கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜெயலலிதாவின் அணியில் இருந்து, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியல் ஏற்ற இறக்கம் கண்டு, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்வான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகவும், 2016ல் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் கோலோச்சினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, 2017ல் அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

Read More

“இபிஎஸ் அண்ணன் OK சொன்னா போதும்” களத்தில் குதிக்கும் விஜய பிரபாகரன்

தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஒகே சொன்னால் போதும். எந்த ego-வும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக இருக்கிறேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு நிழலாக நின்று வேலை செய்ய தயராக இருக்கிறேன். கூட்டணிக்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ADMK Protest: திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admk Poster: எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த சீமான்.. வைரலாகும் அதிமுக போஸ்டர்!

எடப்பாடி பழனிசாமிக்கு, 10 ஆண்டு காலமாக பைசா கூட வாங்காமல் பச்சை மை கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என விமர்சித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுக சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்தார்.

அவதூறு வழக்கில் நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி.. 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு..

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டார். அப்போது அவரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார்