5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Ilayaraja

Ilayaraja

இந்திய சினிமா இசையின் அடையாளமாக பார்க்கப்படும் இளையராஜா, தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ‘அன்னக்கிளி’ என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தமிழ் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர் என்ற பெருமையும் இளையராஜாவையே சேரும். இந்திய திரையுலகில் சுமார் அரைநூற்றாண்டாக தனது இசை என்னும் ஆட்சியை நடத்தும் இளையராஜா தமிழ் ரசிகர்களால் ‘இசைஞானி’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரை வாழ்க்கையில் 1000 திரைப்படங்களுக்கு மேல், 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. மேலும் பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமிக் விருது என பல விருதுகளை வென்றுள்ளார் இளையராஜா. இவர் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்தும், இசை கச்சேரிகள் நடத்தியும் வருகிறார்

Read More

’மஞ்சும்மல் பாய்ஸ்’ பஞ்சாயத்து ஓவர்… இழப்பீடு பெற்ற இளையராஜா – எவ்வளவு தெரியுமா?

Music Director Ilaiyaraaja: படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

Cinema Rewind: திருக்குறளை உருவி ட்யூன் போட்ட இளையராஜா.. என்ன பாட்டு தெரியுமா?

Ilayaraaja: இளையராஜா இசையில் இடம்பெற்ற “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி இணைந்து பாடியிருந்தனர்.  இளையராஜா அந்த பாடலுக்கான ட்யூனை போட்டு விட்டு வரிகளை எழுத கவிஞர் வாலியை அழைத்துள்ளார். அவரும் வர ஸ்டூடியோவில் அங்கு கமல்ஹாசன், அப்படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் ஆகியோரும் இருந்துள்ளனர்.