5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Ms Dhoni

Ms Dhoni

கேப்டன் கூல் என்ற பெயரில் உலகப்புகழ் பெற்ற எம்.எஸ்.தோனி, உலகம் முழுவதும் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன். இவரின் தலைமையின்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. உலக கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர்களில் ஒருவராக தோனி கருதப்படுகிறார். எம்.எஸ்.தோனி கடந்த 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பீகாரில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். தோனியின் தந்தையின் பெயர் பான் சிங் மற்றும் தாயின் பெயர் தேவகி ஆகும். உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள லாம்கடா தொகுதியில்தான் தோனியின் பூர்வீக கிராமம் உள்ளது. தோனிக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். பள்ளி பருவத்தில் இருந்தே தோனி பேட்மிண்டன், கால்பந்து, கிரிக்கெட் என பல விளையாட்டுகளில் பங்கேற்று சிறந்து விளங்கினார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி கொண்டிருந்தபோது, 2004ம் ஆண்டு தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி எம்.எஸ்.தோனி தனது பள்ளி தோழியான சாக்ஷி சிங் ராவத்தை மணந்தார். இவர்களுக்கு தற்போது ஜீவா என்ற மகளும் உள்ளார்.

Read More

MS Dhoni: ஐபிஎல் 2025ல் விளையாட ஆர்வம் காட்டாத தோனி.. விரைவில் ஓய்வு அறிவிப்பா..?

IPL 2025: ஐபிஎல் 2024ல், எம்எஸ் தோனி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடினார். அந்த சீசன் முழுவதும் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட போதிலும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் செய்து அசத்தினார். விக்கெட் கீப்பங்கில் 20 ஓவர்கள் முழுமையாக தோனி நின்றாலும், பேட்டிங்கில் கடைசி 2 ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தோனி பங்கேற்பது குறித்து இப்போது சந்தேகம் உள்ளது. புதிய ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேயின் வழிகாட்டியாக தோனி பொறுப்பேற்கக்கூடும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

MS Dhoni: சம்பளம் பாதியாக குறைப்பு.. ஐபிஎல் 2025ல் தோனி வாங்கபோகும் சம்பளம் இவ்வளவுதானா..?

IPL 2025: 43 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தோனி ஐபிஎல் 2024ல் கேப்டன் பதவியில் இருந்து விலகி சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். ஐபிஎல் 2024ல் தோனி ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கிய போதெல்லாம் ரசிகர்களின் ஆராவாரத்தால் ஸ்டேடியம் அதிர தொடங்கியது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

On This Day In 2007: கம்பீரின் அசத்தல் பேட்டிங்.. தோனி மாஸ்டர் மைண்ட்.. 2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நாள் இன்று!

T20 World Cup 2007: இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இன்று அதாவது செப்டம்பர் 24ம் தேதி முக்கியமான நாளாகும். 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட முதல் சீசனிலேயே மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. 2007ம் ஆண்டு பயிற்சியாளர் இல்லாமலும், ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேச அணியிடம் தோல்வியும் என அப்போது இந்திய அணிக்கு போதாத காலமாக இருந்தது.

IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

MS Dhoni: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி மற்றொரு சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 5 தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சிஎஸ்கே தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் தோனி குறித்தான முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

IND vs BAN: தோனியை விட அதிக ரன்கள்.. இந்திய அணிக்கு அச்சுறுத்தல் தரப்போகும் முஷ்பிகுர் ரஹீம்!

Mushfiqur Rahim: முஷ்பிகுர் ரஹீம் 2010ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டியில் 15 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் உள்பட 604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இவரது சிறந்த ஸ்கோர் 127 ரன்கள் ஆகும். அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் என்ற பெருமையையும் ரஹீம் படைத்துள்ளார்.

IPL 2025: தோனி ஓய்வா? ரிஷப் பண்ட் மீது கண் வைத்த சிஎஸ்கே.. கெய்க்வாட் கேப்டன் இல்லையா?

Rishabh Pant: மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கண்டிப்பாக புதிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தேவையாக உள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனிக்கு மாற்றுவீரராக சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது ரிஷப் பண்ட்தான். தோனிக்கு சரியான மாற்று வீரராக இப்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் உள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியில் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.

MS Dhoni: ஐபிஎல் போட்டிக்கு டாட்டா காட்டுகிறாரா தோனி?.. சிஎஸ்கே வெளியிட்ட ட்வீட்!

Chennai Super Kings: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அவர் ஓய்வு பெறுவதை அறிவிக்கும் விதமாக தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பியதால் சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். இப்படியான நிலையில் நடப்பாண்டு நடைபெற்ற சீசனில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

Yuvraj Singh: ’தோனியை என் வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன்’- சீறிபாய்ந்த யுவராஜ் சிங் தந்தை!

MS Dhoni: இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல வீரர்கள் தோனியை தங்களது ரோல் மாடலாக நினைக்கின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய நட்சத்திர வீரர்கள் தங்களுக்கு தோனி சப்போர்ட் செய்யவில்லை எனில் தங்களது கேரியர் எப்போதோ முடிந்திருக்கும் என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். இப்படியான சூழ்நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் ஒருவரின் தந்தை தோனிதான், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்ததாக பேசியது இணையத்தில் விவாதங்களை கிளப்பி வருகிறது.

Viral Video: கிரிக்கெட் போதும்! பேட்மிண்டனில் பட்டையை கிளப்பிய தோனி.. வைரலாகும் வீடியோ!

MS Dhoni: கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக தோனி, ஒவ்வொரு போட்டிகளிலும் களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் ஸ்டேடியத்தை அதிர செய்கிறது. இதையடுத்து, வருகின்ற ஐபிஎல் 2025ம் ஆண்டு தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தோனியின் உடற்தகுதியும் அந்த அளவிற்கு சிறப்பாகவே உள்ளது. தோனிக்கு விளையாட்டு மீதான காதல் இன்னும் குறையவில்லை.

MS Dhoni: ஐபிஎல் சம்பளம் 2 மடங்கு கட்! பல கோடியை விட்டு விளையாடுவாரா தோனி?

IPL 2025: டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் 4 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்ற அணிகளின் கோரிக்கையை பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த தகவல்கள் முழுமையாக இன்னும் தெரியவில்லை. சிலரின் கேள்வி என்னவென்றால், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பதுதான்.

Dhoni-Raina Retirement: இன்று இரு ஜாம்பவான்கள் அறிவித்த ஓய்வு.. தோனி – ரெய்னா முடிவால் அதிர்ந்த ரசிகர்கள்!

Independence Day: கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய அணி சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில் இரவு 7.29 மணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய மற்றும் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

BCCI: நான்கு கிரிக்கெட் வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், வீரர்களுக்காக செலவழித்த செலவு வீணாகிவிடும். அதனால்தான் தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது மெகா ஏலத்திற்கு பதிலாக மினி ஏலம் நடத்த வேண்டும் என்று காவ்யா மாறன் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். ஆனால், பழைய விதிகளின்படி மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், புதிய தக்கவைப்பு விதிகள் குறித்து பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? பிசிசிஐ கைகளில் இருக்கும் முடிவு..!

IPL 2025: ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி, சிறப்பாக செயல்பட்ட போதிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை. 2024 ஐபிஎல்லில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் எம்.எஸ்.தோனி, விரைவில் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Dhoni Birthday: கார் முதல் காதல் வரை.. தோனி குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!

: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனி அவரது பிறந்த நாளை கொண்டாடும் வீடியோவை சாக்‌ஷி தோனி அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.