5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Navratri

Navratri

இந்து பண்டிகைகளில் மிக முக்கியமானது நவராத்திரி விழா. இந்த விழா இந்தியா முழுவதும் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பதற்கு 9 இரவுகள் என்பது பொருள்படும். சரியாக நிலவு தென்படாத அமாவாசை தினத்துக்கும் அடுத்த 9 நாட்கள் நவராத்திரி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையின்படி நிலவின் முதல் 9 நாட்கள் பெண் தன்மை இருப்பதாகவும், அதனால் கடவுள் தேவிக்கு இது சிறந்த நாட்களாகவும் கருதப்படுகிறது. கடைசி நாளான 9 வதுநாள் நவமியாகும். இந்த தினத்தை நாம் ஆயுத பூஜை, விஜய தசமி என கொண்டாடுகிறோம். இந்த 9 நாட்கள் தேவி கடவுள் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த தினத்தில் கொலு பொம்மைகள் வைத்து தினம் தினம் தேவி வழிபாடு செய்வார்கள். விரதம் இருத்தல், கொலு பொம்மைகள் வைத்தல், கச்சேரிகள், ஆன்மீக சொற்பொழிவு என என இடத்துக்கு இடம் இந்த 9 நாட்கள் கொண்டாட்ட நிலையில் இருக்கும். நவராத்திரி தொடர்பான ஆன்மிக செய்திகளை இந்த தலைப்பின் கீழ் படிக்கலாம்

Read More

Navrathiri 2024: துர்க்கை அம்மன் கையில் இருக்கும் ஆயுதங்கள் யார் கொடுத்தது தெரியுமா?

இந்து மதத்தில் நவராத்திரி பண்டிகை என்பது மிகவும் முக்கியமானது. நவராத்திரி விழா துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இவ்விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் 9 நாட்களும் துர்கா தேவிக்கு ஒன்பது வெவ்வேறு வடிவங்களில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 12 ஆம் தேதி சனிக்கிழமை முடிவடைகிறது.

Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!

நவராத்திரி பண்டிகை என்றாலே நம் வீட்டில் அம்பிகையின் வாசம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதனால் கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நவராத்திரியின் 9 நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி, நாமும் சுத்தமாக இருந்து கடவுளை வணங்க வேண்டும், ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். அதனை மனதில் கொண்டு செயல்பட்டு அவளின் அருள் பெற வேண்டும்.

Navarathiri Viratham: நன்மைகளை அள்ளித்தரும் நவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு இல்லங்கள் மற்றும் கோயில்களிலும் கொலு வழிபாடு நடைபெறும். இதில் பங்கேற்பதால் மிகப்பெரிய பலன்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கொலுவானது ஒன்பது நாட்கள் வைக்கப்படும். புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தான் நவராத்திரி திருவிழா தொடங்கும். அந்த வகையில் நடப்பாண்டு அக்டோபர் 3 தேதி நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது.

Navaratri 2024: நவராத்திரி பண்டிகை.. கொலு வழிபாடு மேற்கொள்வது எப்படி?

ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். பலருக்கும் நவராத்திரியை எப்படி கொண்டாட வேண்டும், என்ன மாதிரியான வழிபாடு நடத்த வேண்டும் என்கிற கேள்வி இருக்கும். நாம் அனைவருக்கும் நவராத்திரி என்றாலே கொலு கண்காட்சிதான் நினைவுக்கு வரும். கோயில்கள் மட்டுமல்லாது இல்லங்களிலும் வைக்கப்படும் கொலு பொம்மைகள் நம்மை மனமகிழ்ச்சியோடு வரவேற்கும்.

Navratri: நவராத்திரி பூஜை முறை… 1ம் நாள் முதல் 9ம் நாள் வரை முழு விவரம்!

Navrathri: புரட்டாசி மாதம் என்றாலே நவராத்திரி பண்டிகை களை‌கட்டும். இந்த வருடம் அக்டோபர் 17ஆம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அற்புதமான 9 நாட்கள் தான் இந்த நவராத்திரி. நாம் என்னென்ன செய்தால் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்?

Navarathri : நவராத்திரியின் போது அம்மனுக்கு எந்த நிற ஆடையை அணிந்து வழிபட வேண்டும்?

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ரவராத்திரி விழாவுக்கான நாட்கள் நெருங்க உள்ளது. இந்த ஒன்பது நாள் திருவிழாவில் ஜெகன் தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. இந்த நவராத்திரி விழாவில் நவ துர்க்கைக்கு விருப்பமான நிறத்தில் புடவை அல்லது ஆடை அணிந்து அம்மனை வழிபடலாம். அப்படியென்றால் நவராத்திரி விழாவில் என்ன நிற புடவை அணிய வேண்டும். நிறத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.