5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Seeman

Seeman

1966ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில் பிறந்த சீமான், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே நிறைவு செய்தார். சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் தொண்டர். இதனால் சீமானுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையிலும் ஆர்வமாக இருந்த சீமான், 1991ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இதன்பிறகு, வீரநடை, தம்பி, வாழ்த்துகள், பாஞ்சாளங்குறிச்சி, ஆகிய படங்களையும் இயக்கியும், மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம், மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தும் தமிழ் திரையிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். என்னதான், திரைத்துறையில் இருந்தாலும், திராவிட கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். இதன்பிறகு 2008ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கு இடையே நடந்த போர் சூழலில், பிரபாகரனை சந்தித்து பேசினார். இந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக தீவிரமாக பேசினார். இது தான் அவர் கட்சி தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. 2009ல் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினார் சீமான். அது, அடுத்த ஆண்டே அரசியல் கட்சியாக உருவெடுத்தது.

Read More

Seeman: நா.த.க., நிர்வாகிகள் விலகல்.. எந்த பிரச்னையும் இல்லை என கூலாக சொன்ன சீமான்!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியான நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள சீமான், “மாவட்ட நிர்வாகிகள் விலகுவதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்குள் திடீரென்று அதிருப்தி வரத்தான் செய்யும். அதனால் பெரிய சிக்கல் ஒன்றும் இல்லை. திருப்தி கிடைக்கும் இடங்களுக்கு போய் சேர வேண்டியது தான் என தெரிவித்துள்ளார்.

Seeman: சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? யோசிக்காமல் சட்டென சொன்ன சீமான்!

வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக கூறி உள்ளார். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். விரைவில் மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

Seeman : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு.. ஏன் தெரியுமா?

SC, ST Commission | அஜேஷ் என்பவர் ஆவடியை அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் அஜேஷின் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அஜேஷ், எஸ்.டி, எஸ்.சி ஆணையத்திடம் சீமான் பேசியது குறித்து புகார் அளித்திருந்தார்.

Admk Poster: எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்த சீமான்.. வைரலாகும் அதிமுக போஸ்டர்!

எடப்பாடி பழனிசாமிக்கு, 10 ஆண்டு காலமாக பைசா கூட வாங்காமல் பச்சை மை கையெழுத்து போட்ட அண்ணாமலையை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என தெரிவித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என விமர்சித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுக சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்தார்.