5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Tamil Nadu Temples

Tamil Nadu Temples

இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சாரம் சார்ந்த மதச்சார்பற்ற நாடு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றது. இந்து மதத்தை பொறுத்தவரை சைவம், வைணவம் இருவகையாக கோயில்கள் தமிழ்நாட்டில் செயல்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் மற்ற மாநிலங்களை விட இங்கு காவல் தெய்வங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலும் பரிகாரம், கிரகப்பலன் தொடங்கி வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளிலும் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் கட்டடக்கலைக்கும், தொல்லியல் ஆராய்ச்சிக்கும் சிறந்த இடமாகவும் கோயில்கள் திகழ்கிறது. உலக மக்களையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு கோயில்கள் தமிழ்நாட்டிலும் உள்ளது. சாதாரண வீதியில் தொடங்கி மிகப்பெரிய கட்டிடங்களுக்குள் வீற்றிருக்கும்,மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்ற தமிழ்நாட்டின் மிக பிரபலமான கோயில்கள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Read More

Murugan Temple: திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்படும் பக்தர்கள் தங்கும் விடுதி… முன்பதிவு செய்வது எப்படி?

Room Booking: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் சகல வசதிகளுடன் கூடிய தங்கும்படி கோயில் நிர்வாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் சிறந்த சேவையை இதன் மூலம் பக்தர்கள் பெற முடியும். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சூரசம்ஹாரத்தில் பங்குபெறும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Padaikatti Maha Mariamman: பாடை கட்டி ஊர்வலம்.. தீரா நோய்களை தீர்க்கும் மகாமாரியம்மன்!

பிரச்னையை தீர்க்க எத்தனை வழிகள் இருந்தாலும் அதனை எல்லாம் முயற்சித்து கடைசியில் கடவுளிடம் தான் சரணடைவோம். இது எல்லா மதத்தினருக்கும் இருக்கும் இயல்பான பண்பாகும். காரணம் எல்லா நம்பிக்கையை விடவும்  கடவுள் நம்பிக்கை இன்னும் நம்மை எத்தகைய இன்னல்கள் வந்தாலும் போராட வைக்கும். இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் தங்கள் உடல்நலப் பாதிப்புகள் குணமாக தமிழ்நாட்டில் ஒரு கோயிலில் பாடை கட்டி பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் உள்ளது.

Purattasi Month: புரட்டாசி 4 ஆம் சனிக்கிழமை.. பக்தர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்!

கிபி 1300 ஆம் ஆண்டு முள்ளிநாடு என்ற பாண்டிய நாட்டின் உட்பிரிவில் இந்த ஊர் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இந்த ஊரின் பெயர் சேரனை வென்றான் திருமடைவிளாகம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஊருக்குக் கிழக்கே ஏரி போல் பறந்து விரிந்து காணப்படும் குளத்தின் பெயரால் பாப்பான் குளம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. கிபி 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயிலின் ராஜகோபுர திருப்பணி துவங்கி பாதியிலேயே நின்று போயிருந்தது.

Vallalar Temple: உலக மக்களின் பசியைப் போக்கும் வடலூர் வள்ளலார் கோயில்!

தினமும் அடியார் ஒருவருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது தான் சின்னம்மையின் வழக்கமாக இருந்துள்ளது. தாயின் இந்த குணம் தான் பிற்காலத்தில் ஏழைகளுக்கு உணவிட்டு சேவை செய்யும் தரும சாலை இராமலிங்க அடிகள் அமைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் வள்ளலார் எனும் பெயரால் அறியப்படும் இராமலிங்க அடிகள் தமிழ் ஞானிகள் வரிசையில் அதிக ஞானம் உடையவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

Gaya Temple: அகால மரணமடைந்தவர்கள் முக்தியடைய வேண்டுமா? – இந்த கோயில் போங்க!

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள கயா நகரின் முன்னோர்கள் இயற்கைக்கான மாறான முறையில் மரணித்தால் அவர்களுக்கு பிண்டம் வழங்குவதற்கான மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இங்கு பிண்டம் வைத்து வழிபாடு செய்வதால் உயிரிழந்தவர்கள் மன அமைதி பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, கயாவில் உள்ள மக்கள் முக்தி பெறுவதற்காக ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, பதினைந்து அல்லது பதினேழு நாட்கள் தங்கள் முன்னோர்களை வழிபடுகிறார்கள்.

Tiruchendur: வாழ்க்கையில் ஏற்றம்… திருச்செந்தூர் முருகன் கோயில் ரகசியம் தெரியுமா?

நாம் பிறந்ததால் தான் வாழ்க்கையில் இன்பம், துன்பம், கவலை, படிப்பு, பக்தி, முக்தி என பல விஷயங்களை நாடுகிறோம். நாம் பிறக்கவே இல்லை என்றால் இத்தகைய விஷயங்கள் எல்லாம் இருக்காது. எதைப்பற்றிய சிந்தனையும் நமக்கு இருக்காது. அத்தகைய பிறவாமை என்ற அருளை நமக்கு முருகன் அருளாகிறார். திருச்செந்தூர் முருகனை நாம் பார்த்தால் அவரின் கையில் ஒரு மலர் இருக்கும்.

Etteluthu Perumal Temple: குழந்தை வரம் அருளும் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் கோயில்!

ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்திருந்த மாயாண்டி சித்தரின் கனவில் ஸ்ரீ ராமபிரான் தோன்றினார். அப்போது, “ராம அவதாரத்தின் போது ஜடாயுவுக்கு தாமிரபரணி நதிக்கரையில் திதி செய்த பின்னர் தான் அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன்குளத்தில் இருப்பதாக தெரிவித்தார். எனவே அங்கு நான் எட்டெழுத்து பெருமாளாக பக்தர்களுக்கு அருள் வழங்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் நீ எனக்கு ஒரு கோயில் கட்டி வணங்கு” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

வசூலை அள்ளிய பழனி ஆண்டவர் கோயில்.. விடுமுறை நாட்களில் மட்டும் ரூ. 5 கோடி காணிக்கை..

பழனி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களான கார்த்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பக்தர்கள் கூட்டமும் அலைமோதும். பழனி ஆண்டவர் கோயிலில் தரிசனம் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோல் வேண்டுதல் நிறைவேறிய பின் பால் குடம், முடி காணிக்கை, காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளப்படும்.

Vinayagar Chaturthi 2024: விடிய விடிய விநாயகருக்கு தேன் அபிஷேகம் நடக்கும் கோயில் எது தெரியுமா?

எந்த ஒரு காரியமாக இருந்தாலும், அல்லது எந்த காரியத்தில் தடைகள் இருந்தாலும் விநாயகரை வழிபட்டால் அதில் வெற்றி நிச்சயம் என்பது எழுதப்படாத விதி. அப்படிப்பட்ட விநாயகர் அவதரித்த தினமாக விநாயக சதுர்த்தி கருதப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதற்கான பத்து நாட்கள் திருவிழா ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் புகழ்பெற்ற விநாயகருக்கு கோயில்கள் பற்றி நாம் பார்த்து வருகிறோம்.

Vinayagar Chaturthi: ஒரே இடத்தில் 67 விநாயகரை காண வேண்டுமா?.. இந்த கோயில் போங்க!

Uchchhishta Ganapathy Temple: வித்யாசூரன் அங்கு கோபத்தோடு வந்து நிற்க விநாயக பெருமான் தன் மனைவி நீல சரஸ்வதி தேவி இடது பக்கத்தில் தாங்கி காட்சி கொடுத்தார். அப்போது ஒரு கோடி சூரியன் இணைந்து ஒன்றாக காட்சி கொடுத்தால் எலும் ஒளிப்போல் பிரம்மாண்டமான விநாயகர் காட்சியளிக்க அந்த ஒளிக்கதிர்வீச்சு தாங்காமல் வித்தியாசூரன் மாண்டு போனான்.

Temple Special: ரக்‌ஷாபந்தன் அன்று மட்டுமே திறக்கப்படும் கோயில்.. ஏன் தெரியுமா?

Bansi Narayan Temple: இந்தியா ஆன்மிக பூமி என அனைவராலும் அழைக்கப்படுகிறது. எங்கு திரும்பினாலும் பல்வேறு மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் இருப்பதை காணலாம். ஒவ்வொரு தலங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பும், வரலாறும் என்பது உள்ளது. அப்படியான நிலையில் ஆண்டுதோறும் ரக்‌ஷாபந்தன் தினத்தன்று ஒருநாள் மட்டும் திறக்கப்படும் கோயில் பற்றி காணலாம்.

Aadi Masam: ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் அம்மன் கோயில்!

Temple Special: ஆடிமாதம் என்றாலே நம்மைச் சுற்றி இறையருள் பரவும் வகையில் ஆன்மிக மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதுமுள்ள அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு என இம்மாதம் முழுக்க ஒரே கொண்டாட்ட காலம் தான்.

Thoranamalai: மன அமைதி தரும் தோரணமலை முருகன் கோயில்.. என்னென்ன சிறப்பு தெரியுமா?

Temple Special: மூலிகை மரங்களும், வற்றாத சுனைகளும் நிறைந்த தோரணமலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனுக்கு திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பம் வாழையடி வாழையாக செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். மொத்தம் 1000 படிகளைக் கொண்ட இந்த கோயிலைச் சுற்றி ராமாநதி, ஜம்புநதி ஆகியவை ஓடுகின்றது. இந்த கோயிலுக்கு பேருந்து, கார், தனிப்பட்ட வாகனங்கள் மூலமாக செல்ல முடியும்.

Ramar Temple: பித்ரு தோஷம் நீக்கும் ராமர் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் நினைவு திதி தவிர இந்த 3 அமாவாசையில் ஏதேனும் ஒருநாளாவது தர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி முன்னோர்களை வழிபடாவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பணம், உடல்நலம் ஆகியவற்றில் பிரச்னை உண்டாகும். இவையெல்லாம் சரியாக நாம் சில கோயில்களுக்கும் சென்றும் வழிபடலாம்.