5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Tirupati Temple

Tirupati Temple

திருப்பதி கோயில்

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை மலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோயில். உலக பிரசித்திப் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த இடம் கலியுக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் செயல்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயில் தொண்டமான் மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் சீர்திருத்தப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. திருப்பதியில் லட்டு என்றால் மிகவும் பிரபலம். வைணவ சமயத்தின் 108 திவ்ய தேச கோயில்களில் 75 வது கோயிலாக திருப்பதி இடம் பெற்றுள்ளது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள், அன்னதானம், பேருந்து, ரயில் சேவை என பலவிதமான வசதிகளையும் மாநில அரசு வழங்கியுள்ளது. புகழ்பெற்ற திருப்பதி கோயில் தொடர்பான தகவல்களை பற்றி நாம் காணலாம்.

Read More

Tirupati: திருப்பதி போக நினைக்கும் பக்தர்களே… இன்று முதல் ரெடியா இருங்க!

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. அதனால் தான் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். குறிப்பாக தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட திருப்பதி ஏழுமலையானை வழங்கினால் போதும் என நம்பப்படுகிறது. இந்த கோயிலில் இலவச தரிசனம், விஐபி தரிசனம், ரூபாய் 300 சிறப்பு கட்டணம் தரிசனம் உள்ளிட்ட பல வழிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Tirupati: திருப்பதி பிரம்மோற்சவம்.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் ஒவ்வொரு மாலை வேளைகளிலும் ஏழுமலையான் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வருவார். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Tirupati: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?

திருப்பதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது பணியின்போது கொடிமரத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த வளையம் உடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திருக்கோயில் நிர்வாகத்தினர் சேதமடைந்த வளையத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Tirupathi: திருப்பதியும் ’ஏழு’ எண்ணிக்கையும்.. பெருமையான 7 விஷயங்கள்.. என்னென்ன தெரியுமா?

Pride of Tirupathi: திருப்பதி ஆந்திராவின் ஆன்மீக அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் உலகிலேயே பழமையும் பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் திருமலை மலைகள் தான். உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு 7 விசயங்கள் பெருமைகள் சேர்க்கின்றன.

பக்தர்களே! திருப்பதியில் நாளை அனைத்து தரிசனங்களும் ரத்து.. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கே உரிய மாதம். பெருமாள் கோயிலகளில் புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் திருப்பதியில் வழக்கத்தை விட அதிக கூட்டம் இருக்கும். அந்த வகையில் நாளை மறுநாள் திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் உற்சவர் 10 அவதாரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Tirupati Laddu Row: ” அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும்” – திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து..

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா, லட்டு ருசி இல்லை என்று மக்கள் புகார் அளித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது மக்களுக்குத் தெரியாது என்றும் இது வெறும் அறிக்கை என்றும் நீதிமன்றம் கூறியது. "அசுத்தமான நெய் பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று நீதிமன்றம் கூறியது.

Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரம்… கருத்து சொல்ல மறுத்த ரஜினி…!

Rajinikanth: வேட்டையன் படத்தை தொடர்ந்து தனது 171-வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன், சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

Tirupati Laddu : திருப்பதி லட்டு விவகாரம்.. பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார்!

Parithabangal | Youtube வலைதளத்தில் பரிதாபங்கள் சேனல் மிகவும் பிரபலமானது. இதனை சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து அதனை பகடி செய்து வீடியோவாக வெளியிடுவது தான் இந்த சேனலின் வழக்கம். அரசியல், சினிமா என எந்த துறையையும் விட்டு வைக்காமல் பகடி செய்வதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சேனலுக்கு மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது.