Viral Video : 1435 அடி உயரத்தில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Selfie Video | உயரமான கட்டிடங்களில் இருப்பது, உயரமான மொட்டை மாடியில் இருந்து எட்டி பார்க்க பயப்படுவது இன்னும் சிலருக்கு உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்போதே கால்கள் நடுங்க தொடங்கிவிடும். அந்த அளவிற்கு உயரம் பலருக்கும் பயத்தை விளைவிக்க கூடியதாக உள்ளது.
செல்ஃபி எடுத்த இளைஞர் : பொதுவாக உயரம் என்றாலே பெரும்பாலானோருக்கு பயம் இருக்கும். அவ்வாரு உயரத்தை கண்டு பயப்படுவது acrophobia என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலான மக்களுக்கு உள்ள ஒரு பிரச்னை தான். உயரமான கட்டிடங்களில் இருப்பது, உயரமான மொட்டை மாடியில் இருந்து எட்டி பார்க்க பயப்படுவது இன்னும் சிலருக்கு உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்போதே கால்கள் நடுங்க தொடங்கிவிடும். அந்த அளவிற்கு உயரம் பலருக்கும் பயத்தை விளைவிக்க கூடியதாக உள்ளது. ஆனால் 1,435 அடி உயர கட்டடித்தில் இருந்து இளைஞர்ப் ஒருவர் செல்ஃபி வீட்யோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1,435 அடி உயர கட்டடத்தின் மீது ஏறி செல்ஃபி வீடியோ எடுத்த இளைஞர்
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியின் எம்பையர் ஸ்டேட் கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் சுமார் 1,435 அடி உயரம் கொண்டது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய கட்டடமாக உள்ளது. இந்த கட்டடத்தை தரையில் இருந்து பார்த்தாலே தலை சுற்றும். அவ்வளவு உயரம் கொண்டது. ஆனால் இளைஞர் ஒருவர் அந்த கட்டடத்தின் மேல் உள்ள ஆண்டனாவில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஏறி செல்ஃபி வீடியோ எடுக்கிறார். அவர் செல்ஃபி ஸ்டிக் வைத்து எடுத்த வீடியோவில் மொத்த நகரமே பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. ஆனால் அந்த இளைஞரோ கொஞம் கூட பயமில்லாமல் அசால்டாக அந்த ஆண்டனா மீது நின்றுக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : Shocking News : திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!
இணையத்தில் வைரலாகும் இளைஞரின் செல்ஃபி வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட உடனே வைரலாக தொடங்கியது. அதன்படி, இந்த வீடியோ இதுவரை சுமார் 42 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து வாயடைத்து போன நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வீட்டின் மாடியில் இருந்து கீழே எட்டி பார்த்தாலே கால்கள் நடுங்க தொடங்கிவிடும். ஆனால் இவரோ எந்த வித பாதுகாப்பும் இன்றி இவ்வளவு உயர கட்டடத்தின் மேல் நிற்கிறாரே என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ஒரு மனிதனால் இதை நிச்சயமாக செய்ய முடியாது என்று அந்த இளைஞரின் அசாத்தியத்தை பாராட்டும் விதமாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
என்னதான் சாதனை முயற்சியாக இருந்தாலும் இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் உயரமான கட்டடத்தில் ஏறுவது ஆபத்தானது என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.