Shocking News : திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்! - Tamil News | A shocking video of man set woman on fire due to denying his marriage proposal | TV9 Tamil

Shocking News : திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

Published: 

30 Jul 2024 22:18 PM

Viral Video |

Shocking News : திருமணம் செய்துக்கொள்ள மறுத்த பெண்.. பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

சிசிடிவி காட்சி

Follow Us On

மத்திய பிரதேசம் : மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை 42 வயது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சப்னா யாதவ் என்ற பெண்ணை, நரேந்திர பஞ்சாபி என்ற நபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சப்னாவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், நரேந்திர பஞ்சாபி அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சப்னா அதனை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்ய மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்

ஆனாலும் சப்னாவை விடாத நரேந்திர பஞ்சாபி , தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சப்னா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அது குறித்து காவல்துறை தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சப்னா தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்து ஆத்திரமடைந்த நரேந்திர பஞ்சாபி, சப்னா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதையும் படிங்க : Wayanad Landslide : 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்

சப்னா தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெட்ரோல் ஊற்றி எரித்ததில் பலத்த காயமடைந்த சப்னா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் நரேந்திர பஞ்சாபியும் காயமடைந்துள்ள நிலையில், அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிகிச்சை முடிந்த பிறகு, நரேந்திர பஞ்சாபி கைது செய்யப்படுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு கடைக்குள் இருக்கும் சப்னா மீது, நரேந்திர பஞ்சாபி பெட்ரோலை வீசுகிறார். பிறகு தீ குச்சியை கிழித்து அவர்மேல் எறிகிறார். உடனே தீப்பற்றிய நிலையில் அலறி துடிக்கும் சப்னாவை அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து காப்பாற்றுகின்றனர். இந்த அனைத்து காட்சிகளும் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version