5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்த காதலி.. அடுத்து நடந்தது என்ன?

Odisha | இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோ ஒடிசாவை சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவரிடம் அவரது பெற்றோர்கள் அங்கிருக்கும் இரும்பு பெட்டியை திறந்து காட்டுமாறு கேட்கின்றனர். ஆனால் அந்த இளம் பெண்ணோ பெட்டியை திறந்து காட்டாமல் சமாளிக்கிறார்.

Viral Video : காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்த காதலி.. அடுத்து நடந்தது என்ன?
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 20 Oct 2024 18:04 PM

சினிமாவில் காதலி, காதலனை அறையில் அடைத்து வைத்திருப்பத்தை பெற்றோர்கள் கண்டுபிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஒடிசாவிலும் இதேபோல ஒரு சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. ஆனால் ஒடிசாவில் காதலி தனது காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்த காதலி

இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோ ஒடிசாவில் நடைபெற்றது என்று தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவரிடம் அவரது பெற்றோர்கள் அங்கிருக்கும் இரும்பு பெட்டியை திறந்து காட்டுமாறு கேட்கின்றனர். ஆனால் அந்த இளம் பெண்ணோ பெட்டியை திறந்து காட்டாமல் சமாளிக்கிறார். ஆனால் இளம் பெண்ணின் செயலில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த பெற்றோர், பெட்டியை திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பெற்றோரின் வலியுறுத்தலின்படி பெட்டியை திறக்க அதில் அந்த இளம் பெண்ணின் காதலன் உடலை மடக்கிக்கொண்டு படுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இளம் பெண்ணின் காதலனை கடுமையாக தாக்க தொடங்குகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், தனது பெற்றோருக்கு முன்பு நின்றுக்கொண்டு காதலனை தாக்காதவாறு தடுக்கிறார். அதுமட்டுமன்றி அங்கு நடப்பதை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்றும் அந்த இளம் பெண் அங்கிருப்பவர்களிடம் கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழு தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இளம் பெண்ணின் இந்த செயல் அதிர்ச்சி அளிப்பதாகவும், அந்த இளைஞரின் உயிருக்கே அது ஆபத்தாக முடிந்திருக்க கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்த கால இளைஞ்ரகள் பயமின்றி ஆபத்தான செயல்களை செய்வதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல சிலர் கிண்டலாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமையல்.. ஓனர் குடும்பத்துக்கு பணிப்பெண் கொடுத்த ஷாக்.!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Latest News