5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமையல்.. ஓனர் குடும்பத்துக்கு பணிப்பெண் கொடுத்த ஷாக்.!

Maid Issue | காசியாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார். வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளதுள்ளனர். அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கு பணிப்பெண் மீது எந்தவித சந்தேகமும் எழவில்லை.

Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமையல்.. ஓனர் குடும்பத்துக்கு பணிப்பெண் கொடுத்த ஷாக்.!
வைரல் வீடியோ!
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Oct 2024 21:19 PM

காசியாபாத்தில் மாவு பிசைவதற்கு சிறுநீர் பயன்படுத்திய பணிப்பெண்ணின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருக்கு தொடர் உடல்நல குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், குடும்பத்தினர் செய்த சோதனையில் இந்த குற்றம் அம்பலமாகியுள்ளது. வீட்டில் பணிப்புரிந்த பணிப்பெண்ணே இத்தகைய செயலை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது, இதை அந்த குடும்பத்தினர் கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமையலறையில் மொபைல் போன் பொருத்திய குடும்பத்தினர்

காசியாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார். வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளதுள்ளனர். அப்போதெல்லாம் அந்த குடும்பத்திற்கு பணிப்பெண் மீது எந்தவித சந்தேகமும் எழவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தொழிலதிபருக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை அளித்தும், மருந்துகள் எடுத்துக்கொண்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சசந்தேகமடைந்த குடும்பத்தினர், பணிப்பெண் சமைக்கும் சமையலில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என நினைத்து சமையலரையில் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : பெண் மீது விழுந்த தண்ணீர் தொட்டி.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வீடியோவால் வெளியான உண்மை

சமையலறையில் பொருத்திய மொபைல் போனில் பதிவாகியிருந்த வீடியோவில் தான் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குடும்பத்தினர் சந்தேகித்த படியே, நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவில், சமையலறையில் சமைத்துக்கொண்டிருக்கும் அந்த பெண், யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு சமையலறையின் கதவை மூடிவிட்டு ஒரு பாத்திரத்தில் தனது சிறுநீரை பிடிக்கிறார். பிறகு அதை மாவு பிசைவதற்கு பயன்படுத்துகிறார். வீடியோ மூலம் இதனை கண்டுபிடித்த குடும்பத்தினர், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : கன்றுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாக அந்த குடும்பத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். 8 ஆண்டுகளாக பணியாற்றிய பெண், இத்தகைய செயலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இந்த சின்ன வயசுல இவ்வளவு நல்ல குணமா.. இணையத்தில் வைரலாகும் பள்ளி சிறுவர்களின் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Latest News