Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | A video of man trying to fell off from 14th floor rescued by the residents | TV9 Tamil

Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Noida | அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற அந்த இளைஞரை காப்பாற்றிய குடியிருப்பு வாசிகள், அந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

22 Oct 2024 17:32 PM

நொய்டாவில், உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 14வது தளத்தில்  இருந்து கீழே குதிக்க முயற்சி செய்யும் நபரை, அந்த குடியிருப்பை சேர்ந்த 2 நபர்கள் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க செய்யும் அந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் ஒரு மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்கிறார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குடியிருப்பு வாசிகள் அவரை குதிக்க வேண்டாம் என்று கத்தி கூச்சலிடுகின்றனர். ஆனால் அந்த நபரோ அவற்றை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அதே இடத்தில் சுவற்றை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார். இதனை கண்ட குடியிருப்பு வாசிகள் இருவர், அந்த நபர் தொங்கிக்கொண்டிருந்த மாடிக்கு ஓடுகின்றனர். பிறகு இருவரும் இணைந்து அந்த நபரை காப்பாற்றும் காட்சிகளும் அதில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற அந்த இளைஞரை காப்பாற்றிய குடியிருப்பு வாசிகள், அந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அந்த நபர் கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக மனநல பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த நபரை போலீசார், அவரது குடும்பத்தினரிடன் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்த காதலி.. அடுத்து நடந்தது என்ன?

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ தற்போதை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களதுன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உரிய நேரத்தில் விரைந்து சென்று காப்பாற்றிய அந்த 2 நபர்களுக்கு வாழ்த்துக்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். சில சமயங்களில் விரைந்து செயல்படுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த வீடியோ உணர்த்துவதாக மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!