5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : இதுதான் தேசப்பற்று.. தேசிய கீதம் பாடும்போது அசையாமல் நின்ற பெயிண்டர்.. வைரல் வீடியோ!

National Anthem | சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது.

Viral Video : இதுதான் தேசப்பற்று.. தேசிய கீதம் பாடும்போது அசையாமல் நின்ற பெயிண்டர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 25 Oct 2024 15:12 PM

இந்தியராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தேசப்பற்று மிக அதிகமாக இருக்கும். அந்த வகையில், கல்லூரியில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கும் நபர் ஒருவர், தேசிய கீதம் ஒலித்ததும் அசையாமல் நிற்கிறார். ஆனால் அந்த கல்லூரி மாணவர்களோ அங்கும், இங்கும் சுற்றித் திர்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், அந்த நபரின் தேசப்பற்று குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by A Class Act by cyber (@cyberdddd)

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கல்லூரியில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். அப்போது தேசிய கீதம் ஒலித்ததும் தான் செய்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு அசையாமல் நிற்கிறார். தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்த கல்லூரி மாணவர்கள் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலையில் அந்த பெயிண்டர் மட்டும் அசையாமல் நிற்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்த மணப்பெண்.. குண்டுகட்டாக தூக்கிச் சென்ற குடும்பத்தினர்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தேசிய கீதம் ஒலிக்கும்போது கல்லூரி மாணவர்கள் அங்கும், இங்கும் சுற்றித்திரிகின்றனர். ஆனால் அந்த நபரோ தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து அசையாமல் நிற்கிறார். அந்த மாணவர்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், அவர் பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், சிறந்த பண்புகளால் உயர்ந்தவராக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய நாட்டு பற்றை காண முடியும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அந்த பெயிண்டரின் நாட்டு பற்றும் சிறப்பு குணங்களை பாராட்டி பலரும் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி சிறுமி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. இணையத்தில் வைரல்!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், தேசிய கீதம் ஒலிக்கும்போது அசையாமல் நிண்றுக்கொண்டிருந்த பெயிண்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News