T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கவனம் ஈர்த்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா? - Tamil News | An young man got attention in India T20 world cup victory rally in Mumbai | TV9 Tamil

T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கவனம் ஈர்த்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?

Published: 

05 Jul 2024 14:18 PM

T20 world cup victory | இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் அதனை கொண்டாடும் விதமாக மும்பையில் வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு இளைஞர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி கிளையில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் கவனம் ஈர்த்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?

மரத்தின் மீது ஏறிய இளைஞர்

Follow Us On

T20 உலக கோப்பை வெற்றி கொண்டாட்டம் : சமீபத்தில் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பையில், கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியது. இதனை கொண்டாடும் விதமாக கடந்த ஜுன் 4 ஆம் தேதி மும்பையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில், உலக கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணியில் இடம்பெற்று இருந்த வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய அணியின் வெற்றியை கொண்டாடுவதற்காக ரசிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பை ஏற்று ஏராளமான ரசிகர்கள் பேரணியில் குவிந்தனர். இந்திய அணியின் வெற்றியியை கொண்டாடும் விதமாக “இந்தியா”, “இந்தியா” என முழக்கமிட்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர். இந்திய அணி உலக கோப்பையை வென்றதை கொண்டாடுவதற்கு இவ்வளவு மக்கள் ஒன்று கூடியது, இந்தியர்களுக்கு கிரிக்கெட் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த கொண்டாட்டத்தில் ஒரு இளைஞர் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். யார் அவர், அப்படி என்ன செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

வெற்றி பேரணி 

ரசிகர்கள் கூட்டம் இந்திய அணியின் வெற்றி பேரணியில் ஆரவாரத்துடன் பங்கேற்க, சிறிது நேரத்தில் அனைவரது கண்களும் அந்த இளைஞர் மீது தான் இருந்தது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில், இளைஞர் ஒருவர் கிரிக்கெட் வீரர்களை தனது மொபைல் போனில் படம் பிடிப்பதற்காக அங்கிருக்கும் உயரமான மரத்தின் உச்சயில் ஏறி நிற்கிறார். இந்த புகைப்படம் வைரலானது மட்டுமன்றி இணையத்தில் பேசு பொருளாகவும் மாறியது.

இதையும் படிங்க : Team India Rally: இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

கவனத்தை ஈர்த்த இளைஞர்

இளைஞர் மரக்கிளை மீது படுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது குறித்து பதிவிட்ட பயனர் ஒருவர், “இவர் காலம் முழுவது நிலைவில் இருப்பார்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “நேற்று நடைபெற்ற வெற்றி பேரணியில் விளையாட்டு வீரர்களை விட இந்த நபர் மிகவும் பிரபலமாகிவிட்டார்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இன்றைய நாளின் புகைப்படம் இது தான் என்றும் அந்த நபர் மரக்கிளை மீது படுத்துக்கொண்டு வீரர்களை பயமுறுத்துகிறார் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories
Viral Video : அதிகாரிகள் முன்பு சீருடையை கழட்டி எறிந்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version