உணவு டெலிவரி பாயின் உருக்கமான கடிதம்.. 2 வாரங்களில் நடந்த அதிசயம்.. நெகிழ்ச்சி சம்பவம்! - Tamil News | Delivery boys soulful letter to the customer made his dream come true | TV9 Tamil

உணவு டெலிவரி பாயின் உருக்கமான கடிதம்.. 2 வாரங்களில் நடந்த அதிசயம்.. நெகிழ்ச்சி சம்பவம்!

love Story | அமெரிக்காவின் அரிசோனா மாகானத்தில் ஸ்லோபோட்சியான் உணவு டெலிவரி செய்யும் நபர், தனது காதலியை கரம் பிடிப்பதற்காக கூடுதலாக உணவு டெலிவரி செய்யும் வேலை பார்ப்பதற்காக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு உருக்கமான கடிதம் வழங்கியுள்ளார். அதை அந்த பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்ட நிலையில் அவர்கள் திருமணத்திற்கு பலரும் உதவி செய்துள்ளனர்.

உணவு டெலிவரி பாயின் உருக்கமான கடிதம்.. 2 வாரங்களில் நடந்த அதிசயம்.. நெகிழ்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 Jul 2024 14:08 PM

உருக்கமான கடிதம் : அமெரிக்காவின் அரிசோனாவை சேர்ந்த எரிக்கா என்பவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவை ஸ்லோபோட்சியான் என்பவர் டெலிவரி செய்துள்ளார். எரிக்காவின் உணவு பொட்டளத்தில் உணவுடன் கூடிய கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்துள்ளது. அதை கண்டு குழப்பமுற்ற எரிக்க அதனை பிரித்து படித்துள்ளார். அதில், ஸ்லோபோட்சியான் தனது காதலியை கரம் பிடிப்பதற்காக கூடுதல் நேரம் உணவு டெலிவரி செய்யும் பணியாற்றுவதாக குறிபிட்டுள்ளார். அதுமட்டுமன்றி எனது காதலிக்கு மிக சிறப்பான திருமண விழாவை கொடுக்க விரும்புகிறேன், அதற்காக நீங்கள் ஏதேனும் உதவி செய்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை படித்த எரிக்கா மனம் உருகி போயுள்ளார்.

ஸ்லோபோட்சியானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பிய எரிக்கா, அந்த கடிதத்தை இணையத்தில் பதிவிட்டு இது சரியான நபர்களை சென்று சேறும் என நம்புவதாக குறிபிட்டுள்ளார். அவரது அந்த பதிவிற்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். மிக குறைவான பின்தொடர்பவர்களையே வைத்திருந்தாலும் எரிக்காவின் பதிவு மிக குறுகிய காலத்தில் 33 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ஸ்லோபோட்சியானின் இந்த உருக்கமான காதல் கதை அனைவரையும் சென்றடைந்துள்ளது.அதன் வெளிப்பாடாக அவர்கள் அன்பை பொழிந்துள்ளனர். ஸ்லோபோட்சியானின் ஒரே பதிவில் உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.உலகின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.

ஸ்லோபோட்சியானின் காதல் கதைக்கு கிடைத்த ஆதரவு குறித்து எரிக்கா நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் “இந்த பதிவு இத்தனை பேரிடம் சென்று சேறும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.தனது நண்பர்கள் அல்லது என்னை பிந்தொடர்பவர்கள் இந்த காதல் ஜோடிக்கு உதவி செய்கிறார்களா என்பதை தான் பார்க்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்”. மேலும் இது குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள ஸ்லோபோட்சியானின் காதலி “எங்கள் காதல் கதைக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை.இது மனிதாபிமானத்தில் மீதான நம்பிக்கை வலுப்படுத்துகிறது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

By far the craziest thing that’s ever happened to me. The outpouring of love for our story truly fuels my faith in humanity!! Thanks for all the support 🤍 https://t.co/uEglKgef37

— Aly Perkins (@PerkinsAly) June 25, 2024

இந்த பதிவு வைரலான ஒரு சில நாட்களிலே அவர்கள் திருமணத்திற்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது.இது குறித்து பதிவிட்ட ஸ்லோபோட்சியான், பண உதவி செய்த அனைவருக்கும் இதையம் நிறைந்த நன்றி தெரிவித்துள்ளார்.உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த காதல் ஜோடி விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!