5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

CCTV Camera on Head | தலையில் கேமரா பொருத்தியது குறித்து தனியார் ஊடகத்திற்கு விளக்கமளித்த அந்த இளம் பெண், தனது பாதுக்காப்பிற்காக தனது தந்தை இதை செய்ததாக கூறுகிறார். தலையில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 13 Sep 2024 15:32 PM

மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்திய தந்தை : பாகிஸ்தானை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்திய சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி தலையில் சிசிடிவி கேமராவுடன் இளம் பெண் ஒருவர் பேட்டி அளிக்கும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் யார் அந்த இளம் பெண், ஏன் அவரது தந்தை அந்த பெண்ணின் தலையில் கேமராவை பொருத்தினார் உள்ளிட்ட காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Annamalai: வெளியான வீடியோ.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்!

மகளை பாதுகாக்க தந்தை எடுத்த அதிரடி முடிவு

குற்ற சம்பவங்களில் இருந்து தனது மகளை பாதுகாக்க அந்த தந்தை இந்த முடிவை எடுத்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பல முயற்சிகளை எடுப்பதும் வழக்கம் தான். ஆனால் இந்த தந்தையோ பாதுகாப்பின் எல்லைக்கே சென்று தனது மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.

மகளை பாதுகாக்க சிசிடிவி மூலம் கண்காணிக்கும் தந்தை

இவ்வாறு தலையில் கேமரா பொருத்தியது குறித்து தனியார் ஊடகத்திற்கு விளக்கமளித்த அந்த இளம் பெண், தனது பாதுக்காப்பிற்காக தனது தந்தை இதை செய்ததாக கூறுகிறார். தலையில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அந்த பெண் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்து விளக்கமளித்த அந்த இளம் பெண், எனது பாதுகாப்பிற்காக தான் எனது தந்தை இதனை என் தலையில் பொருத்தியுள்ளார். அதனால் நான் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். நான் வெளியே சென்று வீடு திரும்பும் வரை எனது தந்தை எனை இந்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்துக்கொண்டே இருப்பார் என்றும் அவர் தான் எனது பாதுகாவலர் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Donald Trump : கமலா ஹாரிஸுடன் இனி நான் விவாதம் நடத்த மாட்டேன்.. டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இளம் பெண்

கராச்சியில் நடந்த சம்பத்தை குறிப்பிட்டு பேசிய அந்த பெண், அதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் தனக்கும் நடந்துவிடாமல் இருக்க தனது பெற்றோர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை அன்று வேறு ஒரு பெண்ணிற்கு நடந்தது நாளை எனக்கும் நடக்கலாம் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவின் பயிற்சி பெண் மருத்துவர் மருத்துவமனையிலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மருத்துவரின் கொலையை அடுத்து வெளியான உடற்கூறாய்வு முடிவுகள் நாட்டையே நடுநடுங்க செய்தது. காரணம், அவ்வளவு கொடூரமாக அந்த மருத்துவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் வெடித்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவருக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்று இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மருத்துவர் மட்டுமன்றி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவி என கடந்த சில மாதங்களில் பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. இந்த இக்கட்டான சூழலில் பெண் பிள்ளையை பாதுகாப்பாக வளர்ப்பதர்கான ஒரு தந்தையில் தவிப்பாக இந்த சம்பவம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News